வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்றுமுதல் இந்த
இணையப்பக்கம் இயங்கத் தொடங்குகிறது. இணையப்பக்கத்துக்காகவென்றே எழுதுகிற சில
படைப்புகளையும் அவ்வப்போது அச்சில் வரும் சில படைப்புகளையும் தொகுத்து இத்தளத்தில்
முன்வைக்கலாம் என்பது என் விருப்பம். நிகழ்காலத்தில் இதற்கான தேவை இருந்தும், நான்
சிற்சில காரணங்களால் நேற்றுவரை தயங்கி ஒதுங்கியிருந்தேன். இப்போதும் அந்தத்
தயக்கங்கள் முற்றிலும் விலகிவிட்டன என்று சொல்லமுடியாது. ஒதுங்கியிருப்பது
வேண்டாம் என்கிற அளவில் மட்டுமே அகன்றிருக்கிறது. இனி தொடர்ந்து எழுதுவேன்.
தற்சமயத்துக்கு வாரம் ஒருமுறை ஒரு புதிய ஆக்கத்தைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று
நினைத்துக்கொண்டிருக்கிறேன். எழுதும் வாய்ப்புகள் தொடர்ந்து கிட்டினால், அடிக்கடி
எழுதுவேன்.
அன்புடன்
பாவண்ணன்
01.01.2015