பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுவந்த காலத்தில் நிர்வாக வசதிக்காக தமிழகம் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் தெலுங்குப் பாளையங்கள் ஐம்பத்தாறு. தமிழ்ப்பாளையங்கள் பதினாறு. பதினாறு தமிழ்ப்பாளையங்களுக்கும் தலைமையிடமாக நெற்கட்டான் செவ்வயல் பாளையம் திகழ்ந்தது.