Home

Showing posts with label ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள். Show all posts
Showing posts with label ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள். Show all posts

Monday, 4 January 2016

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்

.மாதவன் என்னும் எழுத்தாளரைகிருஷ்ணப்பருந்துநாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் புத்தகங்களைப் பெற்று படித்துக்கொண்டிருந்த காலம் அது. கிருஷ்ணப்பருந்துதான் நான் படித்த அவருடைய முதல் படைப்பு. என்னைத் தொடர்ந்து என் நண்பன் பழனியும் அதைப் படித்தான். நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க அந்த நாவலைப்பற்றி விவாதித்தோம்.