ஒருமுறை நானும் மறைந்த எழுத்தாளர் பாரதிமணியும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, குறித்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே புறப்பட்டு மண்டபத்தை அடைந்துவிட்டோம். மண்டபத்துக்கு அருகிலிருந்த உணவு விடுதிக்குச் சென்று காப்பி அருந்தியபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகுதான் மண்டபத்துக்குச் சென்றோம்.