Home

Showing posts with label ஆ.மாதவன். Show all posts
Showing posts with label ஆ.மாதவன். Show all posts

Sunday, 23 July 2023

அந்தரத்தில் மிதக்கும் இசை

  

ஒருமுறை நானும் மறைந்த எழுத்தாளர் பாரதிமணியும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, குறித்த நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாகவே புறப்பட்டு மண்டபத்தை அடைந்துவிட்டோம். மண்டபத்துக்கு அருகிலிருந்த உணவு விடுதிக்குச் சென்று காப்பி அருந்தியபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகுதான் மண்டபத்துக்குச் சென்றோம்.

Monday, 4 January 2016

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்

.மாதவன் என்னும் எழுத்தாளரைகிருஷ்ணப்பருந்துநாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் புத்தகங்களைப் பெற்று படித்துக்கொண்டிருந்த காலம் அது. கிருஷ்ணப்பருந்துதான் நான் படித்த அவருடைய முதல் படைப்பு. என்னைத் தொடர்ந்து என் நண்பன் பழனியும் அதைப் படித்தான். நாங்கள் இருவரும் ஒருநாள் முழுக்க அந்த நாவலைப்பற்றி விவாதித்தோம்.