Home

Showing posts with label உயிர்ப்பின் அதிர்வுகள். Show all posts
Showing posts with label உயிர்ப்பின் அதிர்வுகள். Show all posts

Sunday, 16 April 2023

சாரத்தை நெருங்கும் கலை

  

கவிதை என்பது கருத்துகளைத் திரட்டிப் பாதுகாத்துவைக்கும் பேழையென  ஒரு தரப்பும் அழகியல் கூறுகளால் அணிசெய்து காட்சிக்கு வைக்கும் சிலையென இன்னொரு தரப்பும் முன்வைத்த வாதங்கள் ஓங்கியொலித்தபடி இருந்த ஓர் இக்கட்டான தருணத்தில் அழகியல் கூறுகளையும் உருவகமாக மாற்றப்பட்ட கருத்துகளையும் சரியான விகித அளவில் இணைத்து மரபுப்பாடல்களைப் புனைந்து கவன ஈர்ப்பை உருவாக்கிய முக்கியமான பாவலர் ம.இலெ.தங்கப்பா. தாளக்கட்டும் கற்பனைநயமும் அழகான சொல்லாட்சியும் அமையாத பாடல்கள் எல்லாமே சோளக்கொல்லை பொம்மைகள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கு நிகரானவை என்பதே அவர் எண்ணமாக இருந்தது.

Monday, 7 March 2022

தங்கப்பா - புதிய புத்தகத்தின் முன்னுரை

  

     தங்கப்பா தமிழுலகம் நன்கறிந்த பாவலர். அன்பே வாழ்வின் மையமென தன் வாழ்நாள் முழுதும் சொல்லிக்கொண்டே இருந்தவர். ’அன்பால் நிறைந்த உள்ளத்தில்தான் அமைதியும் நிறைந்திருக்கும். தன் சொந்த முன்னேற்றம் என்ற வேட்கைக்கு அங்கே இடமிருக்காது. தான் என்ற உணர்வுக்கு அடிமையாகாத உள்ளமே வாழ்க்கையை இயற்கைச் சுவையுணர்வுடன் பார்க்கும்என்னும் கருத்துக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டியவர். அவர் வாழ்க்கையே அவர் விடுத்த செய்தி.

Saturday, 14 July 2018

என் ஆசிரியர் தங்கப்பா - கட்டுரை



புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கணிதப்பிரிவில் (பட்டப்படிப்பு) நான் சேர்ந்தேன். கணிதப்பாடங்கள் தனிவகுப்பிலும் மொழிப்பாடங்கள் பொதுவகுப்பிலும் நடத்தப்பட்டன. கணிதப்பிரிவு மாணவர்களோடு விலங்கியல், தாவரவியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் மொழிப்பாடவேளையில் இணைந்துகொள்வார்கள். முதல்நாள் காலைநேரத்துப் பாடவேளைகள் அனைத்தும் கணிதப்பாடங்களாகவே அமைந்தன. உணவு இடைவேளைக்குப் பிறகான முதல் பாடவேளையில் ஆங்கில ஆசிரியர் வந்துபோனார். அதற்குப் பிறகு தமிழ்ப்பாடவேளை. அப்போது எங்களுக்குப் பாடம் எடுக்க வந்தவர் மதனப்பாண்டியன் இலெனின் தங்கப்பா என்கிற .இலெ.தங்கப்பா. அன்றுதான் அவரை நான் முதன்முதலாகப் பார்த்தேன்.