Home

Showing posts with label உலகு புரத்தல். Show all posts
Showing posts with label உலகு புரத்தல். Show all posts

Thursday, 10 November 2016

இருவேறு தோற்றங்கள் - மா.அரங்கநாதனின் சிறுகதைகள்


ங்கள்  இளம்பருவத்துநாட்களில் விழாக்கால மகிழ்ச்சிக்கு ஒருநாளும் குறைவந்ததே இல்லை. ஒவ்வொரு விழா சமயத்திலும் ஒரு புதுவிதமான விளையாட்டுப்பொருள் எங்கள் கைக்குக் கிடைத்துவிடும். ’அவன் கையில் இருந்ததுபோலவே எனக்கும் வேண்டும்என்று வீட்டுப் பெரியவர்களிடம் அழுது அடம்பிடித்து எல்லோருமே வாங்கிவிடுவோம். ஆட்டப்பொருளின் கவர்ச்சி தீரும்வரைக்கும் கீழே வைக்கவே மனம் வராமல் ஆடித் தீர்ப்போம். விழாக்காலக் கடைகளில் எங்களுக்காகவே புதுப்புது விளையாட்டுப்பொருள்கள் வந்தபடியிருக்கும்.