Home

Showing posts with label எண்ணமும் எழுத்தும். Show all posts
Showing posts with label எண்ணமும் எழுத்தும். Show all posts

Monday, 5 August 2024

மனத்தை அறியும் கலை

 மேடையிலே அமர்ந்திருக்கின்ற எழுத்தாளுமைகளுக்கும் அரங்கிலே அமர்ந்திருக்கின்ற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.  இந்த நாள் தமிழிலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான நாள்தொடர்ந்து  தமிழ் எழுத்துலகில்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகின்ற முக்கியமான ஆளுமையான எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் மன நிறைவை அளிக்கிறது.  இந்த மன நிறைவின் வழியாக இன்னொரு முப்பது ஆண்டுகள் அவர் அயர்வின்றி உழைப்பார்.  அத்தகு ஊக்கத்தை பெறுவதற்கான ஒரு முக்கியமான தருணமாக இந்த நாள் அமையும் என்று நான் நம்புகிறேன்.