எழுபதுகளின்
இறுதியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் கிராமத்து
நூலகத்திலிருந்து செகாவுடைய சிறுகதைத்தொகுப்பொன்றைப் படிப்பதற்காக எடுத்துவந்தேன்.
அத்தொகுப்பில் பச்சோந்தி என்னும் சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அக்கதையில் ஒரு பொது இடத்தில் ஒருவனை ஒரு நாய் கடித்துவிடுகிறது. தற்செயலாக அந்தப் பக்கமாக வரும் ஒரு காவலர் அந்தச் சம்பவத்தை விசாரிக்கிறார். வெறிபிடித்த நாயை தெருவில் நடமாடவைத்ததற்காக அதன் உரிமையாளனை விசாரிக்கவேண்டுமென்றும் தண்டிக்கவேண்டுமென்றும் குரலையுயர்த்திச் சொல்கிறார். மாற்றிமாற்றி பலரும் அந்த இடத்தில் உரையாடியபடியே இருக்கிறார்கள். இடையில், அந்த நாய் அந்தத் தெருவில் வசிக்கக்கூடிய காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரியின் வளர்ப்புநாய் என்கிற தகவலை ஒருவன் காவலரிடம் ரகசியமாகச் சொல்கிறான். உடனே காவலரின் தொனி மாறிவிடுகிறது. விறைப்பேறிய குரலில் கடிபட்டவன் ஏதேனும் சேட்டை செய்து நாயை வம்புக்கிழுத்திருக்கக்கூடும் என்றும் அதனால் நாய் கடித்திருக்கலாம் என்றும் சொல்கிறார். என்ன வம்பு செய்தாய் என கடிபட்டவனிடமே விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார். ஒரே கணத்தில் மனம் மாறிவிடுகிற காவலரின் நடத்தை திகைக்கவைத்துவிட்டது. வழக்கம்போல
தேநீர்க்கடையில் உட்கார்ந்து தேநீர் அருந்தியபடி என் நண்பன் பழனியோடு இக்கதையைப்
பகிர்ந்துகொண்டேன். அதே கடைத்தெருவின் வழியாக, பல தருணங்களில்
விசாரணைக்காக கைவிலங்கிடப்பட்ட மனிதர்களை காவலர்கள் அழைத்துச் சென்ற சம்பவங்களையும்
கதையுடன் இணைத்துப் பேசிக்கொண்டோம். அவ்வழக்குகளில் எத்தனை உண்மையானவையாக
இருக்குமோ, எத்தனை புனையப்பட்டவையாக இருக்குமோ என்று சொல்லி கசப்போடு
சிரித்துக்கொண்டோம்.
Showing posts with label என்சிபிஎச். Show all posts
Showing posts with label என்சிபிஎச். Show all posts
Friday, 30 January 2015
வாழ்க்கை: ஒரு விசாரணை
’வாழ்க்கை: ஒரு விசாரணை’ என்னுடைய முதல் நாவல். 1987 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1987 ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் மிகமுக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதியான ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ புத்தகம் வெளிவந்து எனக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. அந்த ஆண்டில்தான் எங்களுக்கு மகன் பிறந்தான். இந்த நாவலின் கையெழுத்துப் பிரதியை வாங்கிப் படித்ததோடு மட்டுமின்றி, அதை வெளியிடுவதற்கான முயற்சியையும் முன்னெடுத்தவர் எழுத்தாளரும் என் நண்பருமான எஸ்.சங்கரநாராயணன். அவர் எப்போதும் என் நன்றிக்குரியவர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலின் மறுபதிப்பைச் சாத்தியமாக்கியவர் என்.சி.பி.எச். பொறுப்பில் உள்ள நண்பர் சரவணன். எல்லோரையும் நன்றியுடன் இத்தருணத்தில் நினைத்துக்கொள்கிறேன்.
புத்தகம் கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.160
’சிதறல்கள்’ நாவலின் புதிய பதிப்புக்கு எழுதிய முன்னுரை
எண்பதுகளின்
தொடக்கத்தில் நான் புதுச்சேரியில் தொலைபேசித்துறையில் ஆப்பரேட்டராக வேலை
செய்துகொண்டிருந்தேன். தொலைபேசி நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்
இருந்தது எங்கள் வீடு. பெரும்பாலும் நான் மாலைநேரப்பணி அல்லது இரவுநேரப்பணியையே
தேர்ந்தெடுத்துச் செய்துவந்தேன். அதிகாலையில் ஆறரைமணிக்கு வேலை முடிந்ததும், அலுவலக வாசலிலேயே
உள்ள தேநீர்க்கடையில் ஒரு தேநீர் அருந்திவிட்டு, வீட்டுக்கு நடந்து
செல்வதுதான் என் வழக்கம். அதிகாலைக்காற்று வீசியபடி இருக்க, ஊரையே மூடியிருக்கும்
இருளின் போர்வையை விலக்கும் சூரியனின் கைவிரல்கள் பட்டதுமே மண்மீதிருந்த
ஒவ்வொன்றின்மீதும் ஒளி சுடர்விடத் தொடங்கும். நடமாட்டம் குறைந்த தெருக்களின்
வாசல்தோறும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் விதவிதமான வண்ணக்கோலங்களைப் பார்த்தபடியே
நடப்பேன். அழகான கோலங்கள். அழகான செடிகள். அழகான மரங்கள். அழகான சாலைகள். காலைநேரம்
அந்த அழகைப் பலமடங்காகப் பெருக்கி கண்களுக்கு விருந்தாக்கிவிடும்.
அந்த விருந்து
அதிகநேரம் நிலைத்திருக்காது. ஒதியஞ்சாலையைக் கடந்து, கம்பன் கலையரங்கத்தை
நெருங்கும்போது மக்கள் நடமாட்டம் பெருகத் தொடங்கிவிடும். ஒரு காரணம் அருகில்
இயங்கிக்கொண்டிருந்த பேருந்து நிலையம். இன்னொரு காரணம் ஆலைகளில் அது ஷிப்ட் மாறும்
நேரம். எங்கெங்கும் மிதிவண்டிகள் காணப்படும். ஆலையின் சுற்றுச்சுவர்களை
ஒட்டியிருந்த சின்னச்சின்ன பெட்டிக்கடைகளில் விதவிதமான வியாபாரம் நடக்கும். திருவிழாவுக்கு
வந்த ஒரு பெரிய கூட்டத்தைப்போல எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதர்கள்
தெரிவார்கள். பாட்டுச்சத்தம். பேச்சுச்சத்தம். சிரிப்புச்சத்தம். வசைகளின் சத்தம்.
வாகனங்களின் சத்தம். நெல்லித்தோப்பு திரும்பும்வரைக்கும் அந்தக்
கோலத்தில் மாற்றமே இருக்காது. ஒவ்வொரு நாளும் அந்தச் சாலையைக் கடப்பது
திருவிழாவுக்குள் புகுந்து வெளியே வருவதுபோல இருக்கும். நெல்லித்தோப்பைக்
கடந்ததுமே, சாலைகளின் மெளன அழகு மறுபடியும் பார்வையில் விழத் தொடங்கும்.
Labels:
chitaralgal,
NCBH,
Novel,
என்சிபிஎச்,
சிதறல்கள்,
நாவல்
சிதறல்கள்
சிதறல்கள் நாவல் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்தது. நெசவாலைத்
தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைக்கும் கதையமைப்பைக்
கொண்டிருந்தாலும், ஒரு வேலை கையைவிட்டுப் போகும்போது, அவ்வேலையுடன் வெகுகாலம்
வாழ்ந்து பழகிவிட்ட எல்லா வகையான தொழிலாளர்களின் வேதனையையும் அடிச்சரடாக இந்த
நாவல் கொண்டிருந்தது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மறுபதிப்பு
சாத்தியமானது. நாவலை வெளியிட்ட என்.சி.பி.எச். நிறுவனத்துக்கு நன்றி.
புத்தகம் கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை-98.
விலை. ரூ.140
Labels:
chitaralgal,
NCBH,
Novel,
என்சிபிஎச்,
சிதறல்கள்,
நாவல்
Subscribe to:
Posts (Atom)