Home

Showing posts with label எஸ்.வைத்தீஸ்வரன். Show all posts
Showing posts with label எஸ்.வைத்தீஸ்வரன். Show all posts

Saturday, 11 June 2022

படிமமும் பார்வையும் : எஸ்.வைத்தீஸ்வரன் கவிதைகள்

 

 ஒரு கவிதையைப் படிக்கும்போது  அக்கவிதையில்  காண நேர்கிற

அபூர்வமான சொல்லிணைவுகளும் படிமங்களும் படிப்பவர் மனத்

தில் உடனடியாக அழுத்தமாக  இடம்பெற்றுவிடுகின்றன.அபூர்வ

மான சொல்லிணைவுகள் ஒருபோதும் திட்டமிட்டு உருவாக்

கப் படமுடியாதவை.

Monday, 20 March 2017

நான் கடவுள் - எஸ். வைத்தீஸ்வரனின் உரிமை



       "பூமியிலே நீ கடவுள் இல்லையென்று புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார் பாரதியார்.   சர்வமத சமரசத்தை முன்னிட்டு நிகழ்த்தும் உரையாடலின் ஒரு பகுதியாக இந்த வரி சொல்லப்படுகிறது.  தன் கடவுள் அனைவரைவிடவும் உயர்வானவர் என்று பெருமையும் உரிமையும் பாராட்டும்போது மற்றவர்களின் கடவுளரைப்பற்றிய ஓர் இகழ்ச்சியுணர்வு பிறப்பதற்கான வழி தானாகவே உருவாகிவிடுகிறது. இகழ்ச்சியுணர்வு என்பது எந்த அளவுக்கு பிறழ்ந்த நிலையோ, அதே அளவுக்கு உயர்வுணர்வும் பிறழ்ந்த நலையே.  இயல்புநிலை என்பது நான்கடவுள் என்னும் உணர்வுநிலை.  அல்லது இறையம்சத்துடன் நான் இருக்கிறேன் என்னும் நிலை.