Home

Showing posts with label கனவுகளும் கண்ணீரும். Show all posts
Showing posts with label கனவுகளும் கண்ணீரும். Show all posts

Monday, 9 February 2015

கனவுகளும் கண்ணீரும்


இது என்னுடைய புதிய கட்டுரைத்தொகுதி. இலக்கியம் தொடர்பான 38 கட்டுரைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. இவை கடந்த நான்காண்டுகளில் அவ்வப்போது எழுதியவை.



நூல் கிடைக்குமிடம்:
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 98

விலை. ரூ.200

‘கனவுகளும் கண்ணீரும்’ நூலுக்கு எழுதிய முன்னுரை

சமீபத்தில் ஒரு பகல்நேரத் தொடர்வண்டிப் பயணத்தின்போது படிப்பதற்காக ஜென் கவிதைப் புத்தகமொன்றை எடுத்துச் சென்றிருந்தேன். ஒவ்வொன்றும் நான்கு அல்லது ஐந்து வரிகள்மட்டுமே கொண்ட கவிதை.  ஆனால், சட்டென்று கடந்துசெல்லமுடியாதபடி ஒவ்வொரு கவிதையும் இழுத்துவைத்துக்கொள்ளும் சக்தியுள்ளதாக இருந்தது. ஒரு கவிதையைப் படிப்பது, அப்புறம் ஒவ்வொரு வரியாக அதையே மீண்டும் படிப்பது, பிறகு மனம்போன போக்கில் ஒவ்வொரு சொல்லாக பிரித்தும் இணைத்தும் புதுப்புது பொருளை உருவாக்கியபடி படிப்பது என அச்சொற்களின் உலகிலேயே திளைத்திருந்தேன். பிறகு திரும்பி ஜன்னல்வழியாகத் தெரியும் நீலவானத்தையும் பின்னோக்கி நகரும் மரங்களையும் புதர்களையும் பாதைகளையும் பார்த்தபடி அதே வரிகளை மீண்டும் மனத்தில் மிதக்கவிட்டு அசைபோட்டபடி இருந்தேன். அப்போது நெஞ்சிலிருந்து பொங்கிவந்த நினைவுகளெல்லாம் அந்தக் கவிதை வரிகளின் பொருளாக மாறித் தோன்றிய அதிசயத்தை உணர்ந்தேன்.
உனது மரணகாலம் நெருங்குகிறது
நீ இறந்துவிடுகிறாய் என்றால்
மிக நல்லது.
உனது மரணகாலம் நெருங்குகிறது
நீ இறக்காதிருக்கிறாய் என்றால்
மிகமிக நல்லது.