தொலைக்காட்சியில் மாலைச்
செய்திகள் வாசிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. மாநில அரசியல்
நிகழ்ச்சிகள், மத்திய அரசின் சில புதிய
திட்டங்கள், அங்கங்கே நிகழும் மக்கள்
போராட்டங்கள்,
வெடிகுண்டு வன்முறைகள், கலவரங்கள், அடக்குமுறைகள்,
கைதுகள், விசாரணைகள், உயிர்ப்பலிகள் என ஒன்றை அடுத்து ஒன்றென காட்சிகள் நகர்ந்துகொண்டே இருந்தன.
அவற்றின் தொடர்ச்சியாக கர்நாடகத்தின் சிறந்த மனிதராக சமீபத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை மேடை நடுவே அமரவைத்து முதல்வரும் மற்ற அமைச்சர்களும்
மாலை மரியாதைகள் செய்து விருதையளிக்கும் காட்சி ஒளிபரப்பானது. செய்தியின் மையம்
மனத்தை ஈர்க்கவே கூடுதலான கவனத்துடன் பார்த்தேன்.