கதரியக்க வளர்ச்சிக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் மேற்கொண்ட தென்னகப்பயணத்தின் ஒரு பகுதியாக காந்தியடிகள் 04.10.1927 அன்று இராஜபாளையத்துக்கு வந்திருந்தார். அன்று அவர் மூன்று கூட்டங்களில் கலந்துகொண்டார். முதலில் மகளிர் மட்டுமே பங்கேற்ற கூட்டத்தில் பேசிவிட்டு அடுத்து, இராஜபாளையம் காதி வஸ்திராலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். மூன்றாவதாக பொதுமக்கள் அனைவரும் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.