Home

Showing posts with label கே.சுவாமிநாதன். Show all posts
Showing posts with label கே.சுவாமிநாதன். Show all posts

Wednesday, 13 November 2019

கே.சுவாமிநாதன் - எப்போதும் இருக்கும் பெயர் - கட்டுரை



1915 ஆம் ஆண்டில் காந்தியடிகள் தன் மனைவி கஸ்தூர்பாவுடன் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்த இந்தியர்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவது அவருடைய நோக்கமாக இருந்தது. அவரை இந்தியன் ரிவ்யுபத்திரிகையின் ஆசிரியரான ஜி..நடேசன் ரயில் நிலையத்துக்கே வந்து வரவேற்று அழைத்துச் சென்று தம் வீட்டிலேயே விருந்தினராகத் தங்கவைத்திருந்தார். ஆர்வத்துடன் அவரைக் காண்பதற்காக ஏராளமான கல்லூரி மாணவர்கள் ரயில்நிலையத்துக்கே வந்திருந்தார்கள்.