Home

Showing posts with label ஜமதக்னி. Show all posts
Showing posts with label ஜமதக்னி. Show all posts

Sunday, 19 December 2021

ஆக்கூர் அனந்தாச்சாரி : நிழலில்லாத மனிதர்

  

08.09.1920 அன்று கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை தீர்மானத்தை முன்வைத்து காந்தியடிகள் நீண்ட நேரம் உரையாற்றினார். அவர் இன்றைய சூழலில் நாம் மூன்றுவிதமான மோகங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். சட்டமன்றத்துக்குச் சென்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இணையாக அமர்ந்துகொள்ள நினைப்பது முதல் மோகம். அநீதியைப்பற்றியும் நேர்மையின்மையைப்பற்றியும் கவலைப்படாத அரசாங்கத்தின் நீதிமன்றங்களில் வாதாடி நீதியை நிலைநாட்டிவிட முடியும் என்று வழக்கறிஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இரண்டாவது மோகம். அரசு வேலைகளில் அமர்வதற்கென தகுதிப்படுத்தும் படிப்புக்காக வடிவமைக்கப்பட்ட கல்விக்கூடங்களில் பட்டம் பெற்றுத் தேர்ச்சியடைவதற்காக பெற்றோர்கள் தம் பிள்ளைகளைக் கல்லூரிகளுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்புவது மூன்றாவது மோகம். நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்த மூன்றில் ஏதோ ஒரு மோகத்தில் மூழ்கியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை ஒருவரும் மறுக்கமுடியாது.  இந்த மோகங்களிலிருந்து விடுபடும் வரைக்கும் கிலாபத் பிரச்சினைக்கும் பஞ்சாப் படுகொலைப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கப்போவதில்லைஎன்றார்.

Thursday, 26 August 2021

ஜமதக்னி : இலட்சியத்தின் தூதர்

 

1857இல் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வங்காளத்தில் இருந்த கவர்னர் கட்டளையிட்டார். உடனே மெட்ராஸிலிருந்த இராணுவப்பிரிவு நீல் என்னும் ஆங்கில அதிகாரியின் தலைமையில் புறப்பட்டுச் சென்று எண்ணற்ற சிப்பாய்களைக் கொன்று குவித்து மோதலை அடக்கியது. நெருக்கடியான தருணத்தில் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் விதமாக அன்றைய அரசு, மெளண்ட் ரோடில் ஸ்பென்சருக்கு அருகில் நீலுக்கு மாபெரும் உருவச்சிலையை வைத்தது.

Sunday, 6 September 2020

எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் - முன்னுரை

  

2020 பிறந்ததும் சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் நான் எழுதிய சத்தியத்தின் ஆட்சி என்னும் கட்டுரைத்தொகுதி வெளிவந்தது. காந்தியடிகளின் பாதையில் மக்களுக்குத் தொண்டாற்றிய ஆளுமைகளின் கதைகளை அதில் எழுதியிருந்தேன். அந்தப் புத்தகத்தை முடிக்கும் தருணத்தில் இன்னும் எழுதப்பட வேண்டியவரின் கதைகள் மனத்தில் விரிந்தன. பல ஆளுமைகளுடைய பெயர்களும் மிகவும் குறைவான தகவல்களும் மட்டுமே என்னிடம் இருந்தன. என்னிடம் உரையாடும் எல்லா நண்பர்களிடமும்உங்களுக்குத் தெரியுமா, உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். பத்து பேர்களிடம் கேட்டால் ஒருவரிடமிருந்தாவது ஏதேனும் பயனுள்ள தகவல்கள் கிடைக்காதா என்ற ஏக்கமே அதற்குக் காரணம்.