Home

Showing posts with label ஜீவானந்தம். Show all posts
Showing posts with label ஜீவானந்தம். Show all posts

Sunday, 17 April 2022

ஜீவானந்தம் : இந்தியாவின் சொத்து

 

1920இல் டிசம்பர் மாத இறுதியில் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் காந்தியடிகள் முன்வைத்த ஒத்துழையாமைப் போராட்டத் திட்டங்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. நீதிமன்றங்களை விலக்கவேண்டும், சட்டமன்றங்களை விலக்கவேண்டும், வெளிநாட்டுத் துணிகளை விலக்கவேண்டும் என்ற மூன்று விலக்குகளும் காந்தியடிகளுடைய தாரக மந்திரங்களாக இருந்தன. 1921 ஆம் ஆண்டு முழுதும் காந்தியடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஓய்வில்லாமல் பயணம் செய்து  மக்களுடைய கவனத்தை ஒத்துழையாமை இயக்கத்தின்பால் ஈர்த்தார். அவருடைய சொற்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குத் துடித்துக்கொண்டிருந்த மக்களுடைய மனப்பாங்கை மாற்றியது. நாட்டுக்காக தியாகம் செய்யத் தயங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஏதேனும் ஒரு வகையில் நாட்டுக்குத் தொண்டாற்றும் எண்ணத்தை ஊட்டியது.

Friday, 20 February 2015

காலம்தோறும் பயன்படும் காந்திய வழிமுறை



பொதுவான மக்கள் உரையாடல்களில் காந்திய வழியை அகிம்சைப் போராட்ட வழியென்றும் இலட்சிய வழியென்றும் குறிப்பிடுவதையே நான் கேட்டிருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழி என்று யாரும் சொல்லி நான் கேட்டதில்லை. அதனால்வெற்றி பெற காந்திய வழிஎன்னும் புத்தகத்தின் தலைப்பைக் கண்டதும்  மிகவும் புதுமையாகத் தோன்றியது. அந்த ஈர்ப்புதான் புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. புத்தகத்தை மூல மொழியான ஆங்கிலத்தில் எழுதியவர் ஆலன் ஆக்ஸல்ராட் என்னும் அமெரிக்கர். நடுவயதைக் கடந்த வரலாற்று ஆய்வாளர். வணிகவியல், மேலாண்மையியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களை எழுதியிருக்கிறார். காந்தியின் கடிதங்களிலிருந்தும் உரைகளிலிருந்தும் கட்டுரைகளிலிருந்தும் முக்கியமான சில தொடர்களை எடுத்துக்கொண்ட ஆக்ஸல்ராட், அவற்றை விரிவான வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து ஆராய்ச்சி செய்கிறார். எந்த நோக்கத்துக்காக அந்தச் சொற்கள் எழுதப்பட்டதோ, அதைப்பற்றிய சுருக்கமாக ஓர் அறிமுகத்தை முதலில் வழங்குகிறார். பிறகு, அதன் தொடர்ச்சியாக அந்தக் கருத்தின் மையத்திலிருந்து மேலாண்மை தொடர்பான சிக்கல்களின் மையத்துக்குச் சென்று, அப்படிப்பட்ட சிக்கல்களைத் தீர்த்துவைக்க காந்தியின் கருத்து உதவும் விதம் பற்றி ஒரு சிறிய வரையறையைக் கொடுக்கிறார். அவ்வரையறைகள் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த உதவும் கொள்கைகளாக விளங்கக்கூடியவை என்றொரு முடிவை நெருங்குகிறார். இறுதியில் காந்திய வழியை வெற்றிக்கான வழியாக வகுத்துச் சொல்கிறார்
ஆக்ஸல்ராட்.