Home

Showing posts with label நரேந்திரகுமார். Show all posts
Showing posts with label நரேந்திரகுமார். Show all posts

Sunday, 21 September 2025

இராசபாளையம் என்னும் தகவல் களஞ்சியம்

 

இராசபாளையம் என்னும் நகரத்தின் பெயரைச் சொன்னதுமே, நான்கு செய்திகள் உடனடியாக ஒரு பொதுவாசகனின் நினைவைத் தொட்டுச் செல்லும். ஒன்று, தமிழ்மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாரசாமிராஜா. இரண்டு, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில். மூன்று ஆங்கிலேயர் காலத்திலிருந்து இயங்கிவரும் பென்னிங்டன் நூலகம். நான்கு, வீட்டுக்காவலுக்குப் பேர்போனது என எல்லோராலும் பாராட்டப்படும் கோம்பைவகை நாய்.  இதுவரை மேலோட்டமாக மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருந்த இச்செய்திகளை வரலாற்றுப்பின்னணியில் மிக விரிவாக தன் ‘இராசபாளையம்’ என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார் நரேந்திரகுமார்.