பூம்புகாரின் பெருமையை முன்வைக்கும்போது இளங்கோவடிகள் ஒற்றை வரியில் ‘பதியெழு அறியாப் பழங்குடி’ என்று குறிப்பிடுகிறார். பூம்புகார் நகரத்தில் வசிக்கும் மக்கள் எந்தக் காரணத்துக்காகவும் எந்தத் தேவைக்காகவும் சொந்த ஊரைவிட்டு எந்தக் காலத்திலும் வெளியே சென்றறியாத, செல்லவேண்டிய அளவுக்கு எவ்விதமான நெருக்கடிகளும் இல்லாதவர்களாக வாழ்கிறார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக அந்த வரியை எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள்.