Home

Showing posts with label பழமலய். Show all posts
Showing posts with label பழமலய். Show all posts

Sunday, 13 February 2022

பழமலய் வழங்கிய அன்புக்காணிக்கை

  

பதிற்றுப்பத்து பாடல்தொகையில் எட்டாம் பத்துக்குரிய பாடல்கள் அனைத்தும் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனின் போர்வெற்றியைப் புகழ்ந்து  அரிசில் கிழார் பாடியவை. ஒவ்வொரு பாட்டும் தகடூர் என்னும் ஊரை இரும்பொறை முற்றுகையிட்டு அழித்துச் சூறையாடிய வீரத்தை விதந்தோதும் வகையில் எழுதியிருக்கிறார் அரிசில் கிழார்.  ’பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின் வெல்பேர் ஆடவர் மறம்புரிந்து காக்கும் வில்பயில் இறும்பின் தகடூர் நூறி’ என்னும் வரிகள் அப்போரின் உச்சக்கட்டக் காட்சியை விவரிக்கின்றன.  ’மக்களுக்குப் பயனளிக்கும் பலவிதமான பொருட்களை காட்டின் உட்பகுதிகளில் குவியலாகக் குவித்து காவல் காத்தபடியே தமக்குள் மோதி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களைத் தாக்கி, அக்காட்டின் அரணாக விளங்கும் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கிய பெருமைக்குரியவன்’ என்பதுதான் அவ்வரிகளின் பொருள். அப்போது தகடூரை ஆண்டவன் அதியமான். அந்தக் கோட்டையின் பெயர் அதியமான் கோட்டை.

Monday, 3 July 2017

அன்பென்னும் வளையம்- பழமலையின் "கிளியப்பட்டு ஆயி"


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று தொடங்குகிறது ஒரு திருக்குறள்.  தாழ்போட்டு அடைத்துப் பாதுகாக்கிற செல்வத்தைக் காட்டிலும் எந்தத் தாழாலும் பூட்டிவைக்கமுடியாத அன்பு மிக உயர்ந்தது. பௌதிகமான இருப்பில் காணத்தக்க பொருள் அல்ல அது.  ஆனால் காற்றுப்போல உணரத்தக்க ஓர் உன்னத உணர்வு.  நாம் அடக்க விரும்பினாலும் கடடுப்பாட்டை மீறி கண்ணீராகவும் கண்மலர்ச்சியாகவும் வெளிப்பட்டுவிடும் எளிய உணர்வு. ஒருபோதும் வற்றாத ஜீவநதியாக அது நெஞ்சில் சுரந்து பெருகிப் பாயக்கூடியது. தன் அன்புக்குரியவர்கள் தன்னைச் சுற்றியே எப்போதும் இருக்கவேண்டும் என்று எண்ணுவது மனிதமன இயல்பு. அன்பைப் பெறுவதிலும் அன்பை வழங்குவதிலும் இருக்கிற பேரானந்தம் உலகில் வேறெதற்கும் இல்லை.