சிறார்களுக்கென பாடல்களை எழுதிவரும் இன்றைய தலைமுறையில் குறிப்பிடத்தக்க கவிஞராக குருங்குளம் முத்து ராஜாவைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள் பாடநூல்களில் இடம்பெறவில்லை என்றாலும் இணைய உலகில் வலம் வருகின்றன. அதன் வழியாக எப்போதும் சிறார்களுக்கு நெருக்கமானவராகவே அவர் இருந்து வருகிறார்.