கொலம்பியாவைச் சேர்ந்த லூயிஸ் சொரியானோ என்னும் பள்ளி ஆசிரியரைப்பற்றிய ஒரு குறிப்பை சமீபத்தில் படித்தேன். இளமைப் பருவத்திலிருந்தே புத்தக வாசிப்பில் சொரியானோவுக்கு ஆர்வம் இருந்தது. அவர் வசித்த கிராமத்தில் நூலகம் இல்லை. அதனால் பக்கத்தில் உள்ள நகரத்துக்குச் சென்று நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படித்தார். தினந்தோறும் பள்ளிக்கும் செல்லவேண்டி இருந்ததால் அவரால் நூலகத்துக்குச் செல்ல முடியவில்லை. அதனால் விடுப்பு நாட்களில் மட்டுமே நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்.