Home

Showing posts with label மலையாளச்சிறுகதைகள். Show all posts
Showing posts with label மலையாளச்சிறுகதைகள். Show all posts

Friday, 30 March 2018

ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கை - எம்.சுகுமாரனின் ’சிவப்புச்சின்னங்கள்’



எம்.சுகுமாரன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய மலையாள எழுத்தாளர்களில் முக்கியமான ஓர் ஆளுமை. தொழிற்சங்கங்களில் நேரடி ஈடுபாடு கொண்டவர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் அவர் காட்டிய தீவிரத்தின் விளைவாக அரசுப்பணியை இழந்தவர். 1982 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து எழுதிய பிறகு பத்தாண்டு காலம் எழுத்து முயற்சிகளைவிட்டு விலகியே இருந்தார். பிறகுபித்ருதர்ப்பணம்என்னும் சிறுகதையின் வழியாக அவரது இரண்டாவது கட்ட எழுத்துவாழ்க்கை தொடங்கியது. ’சிவப்புச்சின்னங்கள்என்னும் குறுநாவல் தொகுப்புக்காக அவர் சாகித்திய அகாதெமியின் விருதைப் பெற்றார். தட்டகம், ஆலாஹாவின் பெண்மக்கள், யாழ்ப்பாணப்புகையிலை, அய்யன் காளியின் வாழ்க்கைவரலாறு  போன்ற படைப்புகளை ஏற்கனவே மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நிர்மால்யா எம்.சுகுமாரனின் சிவப்புச்சின்னங்கள் குறுநாவல் தொகுப்பையும் தமிழாக்கம் செய்துள்ளார்.