’முத்தூ முத்தூ’ என இரண்டு தரம் கூப்பிட்டுப் பதில் வராமல் போகவே எரிச்சலுடன் முனகியபடியே நாலு எட்டு நடந்து பின்கட்டு இறவாணத்தைப் பிடித்தவாறே சாணம் பிசைந்து கொண்டிருந்த ருக்குவிடம் ‘எங்கடி போயி தொலைஞ்சிது ஒன் சிகாமணி?’ என்றான் ராமசாமி.