கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் இயங்கிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இரா.முருகன். பல சிறுகதைகள்மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே அழுத்தமான தடங்களைப் பதித்தவர். கணிப்பொறி உலகைச் சார்ந்தவர். உலகில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி பலவிதமான அனுபவங்களைப் பெற்றவர். இணைய தளங்களில் இவர் பகிர்ந்துகொள்ளும் பலவிதமான அனுபவக்குறிப்புகள் வாசகவரவேற்பைப் பெற்றவை. இவர் ஏற்கனவே எழுதிய “அரசூர் வம்சம்” என்னும் நாவல் இணைய தளத்திலேயே தொடராக வெளிவந்தது. “மூன்று விரல்” நாவலும் இணைய தளமொன்றில் தொடராக இடம்பெற்று இப்போது நூல்வடிவில் பிரசுரமாகியிருக்கிறது.