Home

Showing posts with label கும்பகோணம். Show all posts
Showing posts with label கும்பகோணம். Show all posts

Sunday, 3 May 2026

வாசிப்பு இயக்கத்தின் கொடை

 

கும்பகோணத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களிடையில் அரசு தொடங்கிய காவேரி வாசிப்பு இயக்கம் அழுத்தமான தடத்தைப் பதித்து வருகிறது. பாடநூல்களுக்கு அப்பால் பிற இலக்கிய நூல்களை வாசிக்கும் ஆர்வத்தையும் சொந்தமாக எழுதும் ஆர்வத்தையும் இளம்பருவத்திலேயே மாணவச்செல்வங்களிடையில் வளர்க்கும் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பள்ளியில் பல இளம்படைப்பாளிகளை உருவாக்கியிருக்கிறது. இதற்கு முன்பு வெளிவந்த ‘என் நண்பர்கள் எங்கே?’ ‘பூக்களின் அமைதி’ போன்ற நூல்களே அந்த இயக்கத்தின் வளர்ச்சியை அடையாளப்படுத்தும் சான்றுகளாக விளங்குகின்றன.

Sunday, 31 August 2025

சின்னச்சின்ன கதைச்சித்திரங்கள்

 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாடி முடித்துவிட்டுப் புறப்படும் சமயத்தில் அந்த அரங்கத்திலிருந்த ஒருவர் தயக்கத்தோடு என்னை நெருங்கிவந்து புத்தகவாசிப்பில் ஒருவருக்கு எப்படி ஆர்வம் பிறக்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டார். நான் அவருக்கு விரிவாகவே பதில் சொன்னேன்.

Sunday, 16 May 2021

துரையனார் அடிகள் : மனசாட்சியின் பாதை - கட்டுரை

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் அடங்கிய ஆசியச் சட்டத்தை நிறைவேற்ற ஆங்கில அரசு தீவிரமான முயற்சியில் இறங்கியது. 1906இல் ஆப்பிரிக்காவில் ஆசியர்களின் இருப்பை உயிர்நிலைகளை ஆழமாக அரித்துக் கொல்லும் புற்றுநோய்க்குச் சமமான ஒன்றாக ஒப்பிட்டு தம் வெறுப்பை வெளிப்படையாகவே காட்டினார் ஜெனரல் ஸ்மட்ஸ். அவர் கொண்டுவர நினைத்த அவசரச் சட்டத்தின் நகல் ட்ரான்ஸ்வால் அரசாங்க கெஜட்டில் பிரசுரமானது. தென்னாப்பிரிக்காவில் வசித்துவந்த இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியரின் வாழ்க்கையை அது கேள்விக்குறியாக்கியது. அந்த நகல் சட்டசபையால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகாதபடி அரசின் முயற்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சத்தியாகிரக வழியில் போராட்டத்தில் ஈடுபட்டார் காந்தியடிகள்.