Home

Showing posts with label சரஸ்வதி ராம்நாத். Show all posts
Showing posts with label சரஸ்வதி ராம்நாத். Show all posts

Sunday, 12 April 2026

தியாக வாழ்க்கை

 

மொழிபெயர்ப்பாளர் சரஸ்வதி ராம்நாத் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவெய்தி சில மாதங்கள் முடிந்துவிட்டன. அவருடைய நூற்றாண்டையொட்டி ஒருநாள் நிகழ்ச்சியொன்றை நடத்தவேண்டும் என்னும் நெடுநாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு காலச்சுவட்டின் உதவியோடு சமீபத்தில் கனிந்துவந்தது. நூற்றாண்டு நிகழ்ச்சியை 12.03.2026  அன்று சென்னையில் செல்லம்மாள் கல்லூரியில் நடத்துவது என நாள் குறித்துவிட்டு மற்ற வேலைகளில் இறங்கினேன்.

Sunday, 29 March 2026

சரஸ்வதி ராம்நாத் - புதிய பார்வை இதழில் வெளிவந்த நேர்காணல்

 

மொழி பெயர்ப்புகளுக்குரிய

மரியாதையோ கவனிப்போ தமிழில் இல்லை

 

சந்திப்பு : பாவண்ணன்.

 

சரஸ்வதி ராம்நாத் அவர்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக சிறந்த மொழி பெயர்ப்பாளராகத் தமிழ்ச் சூழலில் இயங்கி வருபவர் சரஸ்வதி ராம்நாத். மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

Sunday, 22 March 2026

சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டு விழா

 

எழுத்தையே தன் தவமாகக் கொண்ட சரஸ்வதி ராம்நாத் அவர்கள், அமராவதி நதிக்கரையோரத்தில் உள்ள தாராபுரம் என்னும் ஊரில் 1925ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் விஸ்வநாத ஐயர், நாமகிரி அம்மாள். மருத்துவராகப் பணி புரிந்து வந்த விஸ்வநாத ஐயர் காந்தியடிகளின் பாதையில் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். அவர் காந்தியடிகள் மீது மிகுந்த ஈடுபாடும் பற்றும் கொண்டிருந்தார்.

Sunday, 7 September 2025

மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்

 

இலக்கியப் பரிமாற்றம் என்பது தொன்றுதொட்டு வருகிற செயல்பாடாகும். ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு மற்றொரு மொழியில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் அப்படைப்பு அம்மொழியின் சொந்தப் படைப்பைப் போலவே கருதப்படும் அளவுக்குச் சொந்தமாகி விடுவதும் மிக இயல்பாகவே எல்லாக் காலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. காலம் காலமாக வாய்மொழிக் கதையாக மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ராமனின் கதையே, அதன் செல்வாக்கு காரணமாக ஒவ்வொரு மொழியிலும் வரிவடிவம் பெற்றிருக்கிறது. வால்மீகி, துளசிதாசர், கம்பர், எழுத்தச்சன் ஆகியோர் அனைவரும் ஒரே மையக் கதையைக் காவியமாக வடித்தாலும் எழுதப்பட்ட காலம், சூழல், பண்பாடு, கலைக்கோட்பாடு சார்ந்து நுட்பமான வித்தியாசங்களைக் கொண்டவையாகவே மலர்ந்தன.