Home

Showing posts with label சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர். Show all posts
Showing posts with label சு.ஆ.வெங்கட சுப்பராய நாயகர். Show all posts

Sunday, 16 January 2022

நன்மையும் தீமையும்


ஏடன் தோட்டம் களிப்பின் உறைவிடம் என்பது ஒரு நம்பிக்கை. அழகான நிலப்பரப்பு, இனிமையான சூழல், விரிந்த வானம், மரங்களும் செடிகளும் கொடிகளுமாக அடர்ந்திருக்கும் பசுமை படர்ந்த இடம் என எங்கெங்கும் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இடமாக அத்தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் இணைப்பறவைகளாக பறந்து திரிந்து மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். மலர்க்குவியலில் ஒரு மலராக, பறவைக்கூட்டத்தில் ஒரு பறவையாக, அச்சூழலின் ஒரு பகுதியாகவே உல்லாசமாக அலைகிறார்கள். ஏதோ ஒரு கணத்தில் எதிர்பாராத விதமாக அவர்கள் நெஞ்சில் படரும் ஆசை அவர்களை அந்த உல்லாசநிலையிலிருந்து அவர்களை விழவைத்துவிடுகிறது. ஆசை இன்பத்தை வழங்கியபோதும், ஒருவித குற்ற உணர்வையும் வழங்குகிறது. ஆதாம் ஏவாள் காலத்தில் தொடங்கிய அந்த மாபெரும் வீழ்ச்சி நவீன மனிதனின் காலம் வரைக்கும் மீட்சியின்றி தொடர்ந்துகொண்டே உள்ளது.

Thursday, 18 June 2020

கசப்பின் சிறுதுளி - கட்டுரை



பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா, இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோஎன்பது சிவவாக்கியரின் வரி. அதுமனிதர்களிடையில் வேறுபாடில்லைஎன்பதை உணர்த்தும் ஞானவாக்கியம். பதினெண்சித்தர்களில் ஒருவர் அவர். சாதிசமய வேறுபாடுகளைப் பெரிதென நினைக்கும் பித்தர்களைச் சாடியவர். மொழி வேறுபாடு, இனவேறுபாடுகளப் பெரிதெனப் பேசித் திரிகிறவர்கள் கேட்டு மனம் திருந்துபவர்களுக்காக சொல்லப்பட்டதாகவும் நாம் இந்த வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் கணியன் பூங்குன்றனார்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று சொன்ன மகாவாக்கியத்தின் மற்றொரு வடிவமே இது.

Thursday, 4 June 2020

அழிவும் அல்லலும் - கட்டுரை




11.03.2011 அன்று ஜப்பானில் ஃபுக்குஷிமா நகரில் ஒரே சமயத்தில் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து கடற்கரை ஓரமாக மின்சார உற்பத்திக்காக அமைக்கப்பட்டிருந்த நான்கு அணு மின்உலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.