Home

Showing posts with label சு.முத்துஇலக்குமி. Show all posts
Showing posts with label சு.முத்துஇலக்குமி. Show all posts

Monday, 5 August 2024

காந்திய வழி என்னும் ஆலமரம்

  

தென்னாப்பிரிக்காவிலிருந்து 09.01.1915 அன்று காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார். பிறகு  கோகலேயின் ஆலோசனைப்படி இந்தியாவின் நிகழ்முறைகளைப் புரிந்துகொள்வதற்காக ஓராண்டுக் காலம் தேசமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். அப்பயணத்தின் தொடர்ச்சியாக லக்னோ நகருக்கு வந்து 1916ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் சம்பாரண் விவசாயிகளின் துன்பங்களை முன்வைத்துப் பேசுவதற்காகச் சென்ற ராஜ்குமார் சுக்லா காந்தியடிகளைச் சந்தித்து சம்பாரணுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.  விரைவில் கல்கத்தாவுக்கு வரவிருப்பதாகவும் அப்போது சம்பாரணுக்கு வருவதாகவும் சுக்லாவுக்கு வாக்களித்தார் காந்தியடிகள்.

Sunday, 1 May 2022

காலம் வகுத்தளித்த கடமை

  

காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு  இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து காந்தியின் வழியில் மக்களுக்குச் சேவையாற்றியவர் ஸ்லேட் மேடலின் என்கிற மீரா பெஹன். இமயமலையைப் பாதுகாப்பதில் இந்திய அரசு கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் என நம் நாட்டுக்கு விடுதலை கிடைத்ததுமே எடுத்துரைத்தவர் அவர். அவர் அப்போது ரிஷிகேஷ் படுகையில் தன் ஆசிரமத்தை அமைத்திருந்தார். எதிர்பாராமல் கங்கையில் பெருகிவந்த வெள்ளத்தில் அந்த ஆசிரமம் சேதமடைந்தது. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மீரா பெஹன் வெள்ளத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்டார். இமயமலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் ஏராளமான ஓக் மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்தன. மரங்களை வெட்டி பணமீட்டும் முதலாளிகள் ஆண்டுக்கணக்கில் அவற்றை வெட்டியெடுத்தபடி இருந்தனர். அதற்கு ஈடாக வேகமாக வளரக்கூடிய பைன் மரங்களை நட்டு வளர்த்தனர். தொலைவிலிருந்து பார்க்கும் கண்களுக்கு காடு அப்படியே நிலைத்திருப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை அது தந்தது.