Home

Showing posts with label தமிழ்நாட்டில் காந்தி. Show all posts
Showing posts with label தமிழ்நாட்டில் காந்தி. Show all posts

Sunday, 23 July 2023

அ.இராமசாமி : முழுமை பெற்ற சித்திரம்

  

நான் அல்சூரில் வசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் (1989), தாமோதர முதலியார் தெருவில் இயங்கிவந்த திருக்குறள் மன்றம் என்னும் நூலகத்தில் உறுப்பினராகி புத்தகங்களை எடுத்துப் படித்துவந்தேன். காந்தியடிகள் தொடர்பான பல முக்கியமான நூல்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காந்தியடிகளின் கடிதங்கள், உரைக்குறிப்புகள், கட்டுரைகள், பயணக்குறிப்புகள் ஆகியவை அடங்கிய ஆறு பெருந்தொகுதிகளை அங்கேதான் முதன்முதலில் பார்த்தேன்பச்சை நிறத்தில் ஒரு பெரிய பேரேடுபோல உருவாக்கப்பட்டிருந்த கட்டமைப்பு உறுதியாகவும் அழகாகவும் இருந்தன. எல்லாமே அறுபதுகளில் வெளிவந்தவை. நான் அவை அனைத்தையும் ஒவ்வொன்றாக வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்தேன். தற்செயலாக எனக்கு அப்போது இன்னொரு புதையல் கிடைத்தது. அது .ராமசாமி என்பவர் எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' என்னும் புத்தகம். அதுவும் அறுபதுகளில் வெளிவந்த புத்தகம்

Wednesday, 27 November 2019

உண்மையின் உருவம் - கட்டுரை



காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா? என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றில் பேசியதாகப் படித்தேன். காந்தி அப்படிப் பேசியதுண்டா?என்று கேட்டார். “உண்மைதான். ஆனால் அதை எதற்கு ஏதோ துப்பறிந்து சொல்லப்பட்ட செய்தியைப்போலச் சொல்கிறீர்கள்? ஓளிவு மறைவு எதுவுமே இல்லாத தலைவர் அவர். அவர் சொன்னவை அனைத்தும் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதியவை அனைத்தும் மீண்டும்மீண்டும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவருடைய நீண்ட உரையில் முடிவாக ஒரே ஒரு வரியைச் சொல்வதற்குமுன்னால் குறைந்தபட்சம் பத்துவரிகளாவது அடுக்கிச் சொல்லி, இறுதியாக அந்த முடிவுவரியைச் சொல்வதுதான் அவர் பழக்கம். தொடக்கத்தில் சொல்லப்படும் பத்து வரிகளையும் வசதியாக மறந்துவிட்டு, அதன் இறுதிவரியைமட்டும் முக்கியத்துவப்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லை....என்றேன்.