நான் பெங்களூருக்கு 1989ஆம் ஆண்டில் குடியேறினேன். அப்போது பெங்களூரில் எனக்கு அறிமுகமான ஒரே நண்பர் காவ்யா சண்முகசுந்தரம். அவர்தான் எனக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்தார். அவருடைய வீட்டுக்கும் எங்களுடைய வீட்டுக்கும் ஐந்து நிமிட நடை தொலைவு மட்டுமே. அவர் வழியாகத்தான் பலர் எனக்கு நண்பர்களாக அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் நல்லபெருமாள். அந்த நாள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நினைவிலுள்ளது.