Home

Showing posts with label வாழ்வின் தடங்கள். Show all posts
Showing posts with label வாழ்வின் தடங்கள். Show all posts

Monday, 12 July 2021

சித்தலிங்கையா : நட்பார்ந்த கைகளும் புன்னகையும்

 

1982இல் கர்நாடகத்தில் ஹொஸபேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்கு காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்திவந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார். அவருக்கு நாடகங்கள் மீது தணியாத ஆர்வமிருந்தது.  ஒருநாள் நான் முன்வரிசையில் இருந்த ஒரு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பின்வரிசை மேசையைச் சுற்றி ஆறேழு இளைஞர்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு பாட்டின் வரிகளை ஒருமித்த குரலில் பாடிப்பாடி பயிற்சி செய்தார்கள். எல்லோருமே குருஷாந்தப்பாவின் நண்பர்கள்.

Sunday, 4 July 2021

சித்தலிங்கையா : நினைவில் நிலைத்திருக்கும் ஆளுமை

 

11.06.2021 அன்று தமிழுலகம் நன்கறிந்த கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா தன் அறுபத்தேழாவது வயதில் தீநுண்மி தொற்றின் காரணமாக இயற்கையெய்தினார். அரசு மரியாதையோடு அவருடைய இறுதிப்பயணம் நடந்து முடிந்தது. அவருடைய மறைவையொட்டி இந்தியப் பிரதமர், கர்நாடகத்தின் முதல்வர், அமைச்சர்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலித் அமைப்பினர், சமூக ஆய்வாளர்கள், பல்வேறு கட்சியினர் என அனைவருமே இரங்கல் செய்தி விடுத்தனர்.

Sunday, 20 June 2021

சித்தலிங்கையா : எளியவர் போற்றிய கலைஞன்

 

சித்தலிங்கையா 1954 ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் மாகடிக்கு அருகில் உள்ள மஞ்சணபெலெ என்னும் ஊரில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய பள்ளிப்படிப்பும் கல்லூரிப்படிப்பும் பெங்களூரில் அமைந்தன. முதுகலைப்படிப்பில் கன்னட மொழியை பாடமாக எடுத்து தங்கப்பதக்கத்துடன் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேறி கன்னட ஆய்வு மையத்தில் இணைந்தார். பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, எண்ணற்ற கள ஆய்வுகளுக்குப் பிறகு நாட்டுப்புறத் தெய்வங்கள் என்னும் தலைப்பில் அவர் எழுதிய ஆய்வேடு இன்றளவும் கன்னட ஆய்வாளர்களிடையில் ஒரு வழிகாட்டி நூலாக விளங்குகிறது.