Home

Showing posts with label காலச்சுவடு. Show all posts
Showing posts with label காலச்சுவடு. Show all posts

Sunday, 12 April 2026

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

Sunday, 29 March 2026

சங்குத்தோரணமும் முதுகுத்தழும்பும்

 

ஏற்கனவே இரு கவிதைத்தொகுதிகள் வழியாகத் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான சுஜாதா செல்வராஜ் தன் முதல் சிறுகதைத்தொகுதியை இப்போது வெளியிட்டிருக்கிறார். கடந்த பதினான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதியிருந்தாலும் அவை இப்போதுதான் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  

Sunday, 22 February 2026

ஒரு மகளின் நினைவோடை

 

கடந்த நூற்றாண்டில் நவீனத்துவத்தின் பார்வையை தமிழ்ச்சிறுகதைகளுக்கு வழங்கியவர் புதுமைப்பித்தன். நாற்பத்திரண்டு ஆண்டு காலம் மட்டுமே அவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோதிலும் பலவேறு வகைமைகளில் ஏறத்தாழ நூற்றியெட்டு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். சிறுகதை, கவிதை, விமர்சனம் என பல தளங்களிலும் தொடர்ச்சியாக இயங்கியவர் அவர். இன்று, புதிதாக தமிழ்ச்சிறுகதையை வாசிக்கத் தொடங்கும் ஓர் இளம்வாசகனுக்கும் கூட நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குவதாகவும் புதுமைத்தோற்றம் அளிப்பதாகவும் அவருடைய கதைகள் அமைந்திருக்கின்றன.

Sunday, 30 November 2025

எஸ்.எல்.பைரப்பா : உண்மையின் அழகு

 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தின் பல பகுதிகளில் பிளேக் என்னும் நோய் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியது.  ஓராண்டு காலம் நீண்ட தீவிரமான மருத்துவச் சிகிச்சையின் விளைவாக ஒரு வழியாக பிளேக் தடுக்கப்பட்டது. எனினும் நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும்  பிளேக் நோய் மீண்டும் பரவத் தொடங்கி கிராமங்களிலும் நகரங்களிலும் பல உயிர்களைப் பலி வாங்கத் தொடங்கியது.

Sunday, 14 January 2024

அர்ப்பணிப்புணர்வின் ஆழம்

  

1988ஆம் ஆண்டு பொங்கலையொட்டி சென்னையில் நடைபெற்ற புத்தகக்கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் சங்கரநாராயணனோடு இரு நாட்கள் கண்காட்சிக்குள் சுற்றி ஏராளமான புத்தகங்களை வாங்கினேன். அன்னம் பதிப்பகத்தில் அப்போது நவகவிதை வரிசை என்னும் தலைப்பில் வித்தியாசமான வடிவத்தில் புதிய கவிஞர்களின் கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருந்தார்கள். நான் எல்லாத் தொகுதிகளையும் எடுத்துக்கொண்டேன். நான் கவிதைத்தொகுதிகளை ஆர்வத்துடன் வாங்குவதைப் பார்த்துவிட்டு கடையில் இருந்தவர் “இந்தத் தொகுதியையும் படிச்சிப் பாருங்க. நல்லா இருக்கும்” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்.

Monday, 12 July 2021

சித்தலிங்கையா : நட்பார்ந்த கைகளும் புன்னகையும்

 

1982இல் கர்நாடகத்தில் ஹொஸபேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்கு காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்திவந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார். அவருக்கு நாடகங்கள் மீது தணியாத ஆர்வமிருந்தது.  ஒருநாள் நான் முன்வரிசையில் இருந்த ஒரு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பின்வரிசை மேசையைச் சுற்றி ஆறேழு இளைஞர்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு பாட்டின் வரிகளை ஒருமித்த குரலில் பாடிப்பாடி பயிற்சி செய்தார்கள். எல்லோருமே குருஷாந்தப்பாவின் நண்பர்கள்.

Friday, 1 July 2016

பிரயாணம் - தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்புக்கான முன்னுரை






இந்தத் தொகுப்பின் பத்தொன்பது சிறுகதைகளுக்கிடையே என்னுடைய முப்பத்துமூன்றாண்டு கால சிறுகதைவாழ்க்கை விரிந்திருக்கிறது. இது நான் ஒரு பறவையென பறந்து திரிந்த வானம். ஓர் ஆறென ஓடி உருவான தடம். காற்றென அலைந்து திரிந்த வெளி. உங்களுக்கும் எனக்கும் பொதுவான ஒருசில கணங்களாவது இத்தொகுப்பில் இருக்கக்கூடும்.