வில்லியம் சரோயன், சிங்கர் ஆகிய எழுத்தாளர்களின்
படைப்புகளைப் படிக்கும்படி முதன்முதலில் எனக்கு ஆலோசனை வழங்கியவர் அசோகமித்திரன். அதற்குப்
பிறகுதான் அவர்களுடைய சிறுகதைத்தொகுதிகளைத் தேடி வாங்கிப் படித்தேன். இருவருமே மகத்தான
எழுத்தாளர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு தன் இளம்பருவத்து அனுபவங்கள்
விதைகளாகவும் உரங்களாகவும் எவ்விதம் அமைந்திருக்கின்றன என்பதை இத்தொகுதிகளைப் படிக்கும்போது
உணர்ந்துகொள்ள முடியும். இவர்களுக்கு இணையாக தமிழில் சொல்லத்தக்க ஒரே எழுத்தாளர் அசோகமித்திரன்
மட்டுமே.