வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘எனது பர்மா வழிநடைப்பயணம்’ புத்தகத்தைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. இன்று, இரண்டாம் உலகப்போர் என்பது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுத்தகவல். ஆனால் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கோ உயிர்ப்பிரச்சினை. ஜப்பானிய போர்விமானங்கள் ரங்கூன் நகரத்தின் மீது குண்டுவீசித் தாக்கியபோது, அங்கே வாழ்ந்துவந்த ஏராளமான தமிழர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நகரத்தைவிட்டு உடனடியாக வெளியேறி பதுங்கு குழிகளில் வாசம் செய்தனர். பிறகு அகதிகளாக அங்கிருந்து தப்பினார்கள். ஆங்கில ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் விமானம் வழியாகவும் கப்பல் வழியாகவும் வெளியேற, எந்தத் தொடர்புமற்றவர்கள் நடந்தே வெளியேறினார்கள். கடுமையான குளிரில் காட்டுப்பகுதி வழியாக இரண்டு மாதம் பயணம் செய்து கல்கத்தாவுக்குள் நுழைந்தனர். அகதியோடு அகதியாக பர்மாவிலிருந்து வெளியேறியவர்களில்
வெ.சாமிநாதசர்மாவின் குடும்பமும் ஒன்று. தம் சொந்த வாழ்வனுபவத்தையே அவர் நூலாக எழுதியுள்ளார்.
Friday, 15 March 2019
தேனருவியிலிருந்து தேனருவிவரை - கட்டுரை
அர்ச்சனாவின் திருமணம் சிறப்பாக நடந்தது. ரோஜாப்பூ மாலையுடன் திருமண ஒப்பனையில் அர்ச்சனா மிகவும் அழகாக இருந்தாள். மணமேடையில் அமர்ந்திருந்த போதும் அலுவலக ஆட்களை அவள் புன்னகையோடு கைகுவித்து வணங்கி வரவேற்ற விதம் அழகாக இருந்தது.
Saturday, 23 February 2019
அன்பு நடமாடும் கலைக்கூடம் - கட்டுரை
கண்ணப்பன் அங்காடிக்குள் கத்தரிக்காயிலிருந்து காப்பித்தூள் பொட்டலம் வரைக்கும் எதைவேண்டுமானாலும் தொட்டுப் பார்த்தோ, கலைத்துப்போட்டோ தேர்ந்தெடுத்து கூடையை நிரப்பிக்கொள்ளலாம். அது ஒரு சுதந்திரம். ஆனால் கூடையோடு கல்லாவுக்கு முன்னால் வரிசையில் நின்று பணம் செலுத்திவிட்டு வெளியே வருவதுமட்டும் எளிய விஷயமில்லை. குறைந்தபட்சமாக இருபது நிமிடங்களிலிருந்து முப்பது நிமிடம்வரைக்கும் நின்றுதான் தீரவேண்டும். ஆனால் அந்த அலுப்பை ஒரு கணம்கூட வாடிக்கையாளர்கள் உணராதபடி கல்லாவுக்கு எதிர்ப்புறமாக உள்ள சுவரில் அகன்ற திரையுள்ள ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துவிட்டார்
கடைக்காரர்.
புல்லாங்குழல் - கட்டுரை
பள்ளிக்கூடத்தில் பாடம் இல்லாத நேரங்களில் எதைக் குறித்த பேச்சாக இருந்தாலும் என்னமோ ஓர் உலக அதிசயத்தைப்பற்றிய பேச்சைப்போல
நடித்து இட்டுக்கட்டிப் பேசுவதுதான் பழக்கம். சினிமா, நாடகம், கூத்து, குழாயடிச் சண்டை, மூணு சீட்டு ஆட்டம் எல்லாமே எங்களுக்கு அதிசயங்கள்தான். கண்டதையும் காணாததையும் இழுத்து இழுத்துப் பேசுவோம்.
Thursday, 7 February 2019
நாவல் பழம் - கட்டுரை
இருபது ஆண்டுகளுக்கு முன்பு சிவசமுத்திரத்தையும் மைசூரையும் இணைக்கும் வழித்தடத்தை ஆய்வு செய்வதற்காகச் சென்றிருந்தேன். சிவசமுத்திரத்தைச் சேர்ந்த நண்பரொருவர் எனக்குத் துணையாக வந்திருந்தார். கடுமையான வெயில். நாங்கள் கொண்டுசென்றிருந்த தண்ணீர்ப்பாட்டில்கள் எல்லாமே காலியாகிவிட்டன. ”கோயில் பக்கம் போயிட்டா கிடைக்கும் சார்” என்று நண்பர் தொலைவில் தெரிந்த கோபுரத்தைக் காட்டினார்.
நம்மால் என்ன செய்யமுடியும்? - கட்டுரை
காலைநடையின்போதே காற்றின் வேகம்
கூடுதலாக இருப்பதுபோலத் தோன்றியது.
ஆனால் அது மழையைக்
கொண்டுவரும் வேகமா அல்லது
வரவிருக்கும் மழையை நிறுத்தப்போகும் வேகமா என்பதுதான்
புரியவில்லை. எதிரில் வந்த
வாகனத்தால் எழுந்த புழுதிப்புகை
கொடியிலிருந்து உருவிக்கொண்டோடும் ஆடையென
வளைந்து வளைந்து போனது.
சில கணங்களுக்கு கண்களைத்
திறக்கவே முடியவில்லை. சிறிது நேரம் ஓரமாக
ஒதுங்கி நின்றபிறகே நடையைத்
தொடர்ந்தேன். காற்றின் தாண்டவத்தைக்
கவனித்தபடி சூரியன் தன்
போக்கில் நகர்ந்துகொண்டிருந்தது.
Friday, 25 January 2019
எங்கள் ஊரில் சவண்டல்மரம் இல்லை - கட்டுரை
வீரமுத்துவின் கண்கள் எங்கோ மறைந்துநின்றபடி என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன என்ற எண்ணத்தை ஒரு நம்பிக்கைபோல ஐம்பதாண்டு காலமாக என் மனத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் சட்டென்று என் முன்னால் தோன்றி என் தோளைத் தொட்டு அவன் அழுத்துவான் என்னும் எதிர்பார்ப்பிலிருந்து என்னால் ஒரு கணம் கூட விடுபட முடிந்ததில்லை.
Labels:
சவண்டல் மரம்,
பாவண்ணன்
Subscribe to:
Posts (Atom)