பாவண்ணன் நேர்காணல்
பாவண்ணன் நேர்காணல்
புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் ஓடும் எல்லாப் பேருந்துகளும் எங்கள் கிராமமான வளவனூரில் நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டும் இறக்கிவிட்டும் செல்லும். ஆனால் அந்த நிறுத்தத்தின் பெயரை ஒருவரும் வளவனூர் என்று சொல்வதில்லை. வளவனூர் சத்திரம் என்று சொல்வதுதான் வழக்கம். அந்த அளவுக்கு சத்திரம் என்னும் பெயர் மக்களின் மனத்தில் இன்றளவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது.
பிரதமரான நேருவிடம் ஒரு நேர்காணலில் “காந்தியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?” என்றொரு கேள்வியை ஒரு நிரூபர் கேட்டார். அதற்கு நேரு ”அச்சமின்மையும் எளிமையும் நல்லிணக்கப்பார்வையும் உண்மையும் ஊக்கமும் கொண்ட செயல்திறமையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட முக்கியமான விஷயங்கள். நான் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அவர் இதைத்தான் கடைசி மூச்சு வரை கற்றுக்கொடுக்க முயற்சி செய்துகொண்டே இருந்தார்” என்று பதில் சொன்னார். காந்தியடிகளை இதைவிட ஒரு சிறந்த ஒரு பதிலால் ஒருவரும் வரையறுத்துவிட முடியாது.
மீனாட்சி அக்கா ஜன்னலோரமாக தையல் மிஷினில் புடவைக்கு ஃபால்ஸ் வைத்து தைத்துக்கொண்டிருந்தாள். காமாட்சி அக்கா தூணில் சாய்ந்தபடி மடியில் முறத்தை வைத்துக்கொண்டு வேர்க்கடலையை தோல் உரித்துக்கொண்டிருந்தாள். ”வேலை விஷயமா ஒரு கம்பெனி மானேஜர பார்க்கப் போவலாம் வாடான்னு ராகவன் சொல்லியிருந்தான். நெல்லித்தோப்பு வரைக்கும் போயிட்டு வரேங்க்கா” என்று இரண்டு அக்காக்களிடமும் பொதுவாக விடைபெற்றுக்கொண்டு ’சின்னஞ்சிறு கிளியே என் சித்திரப் பூங்குயிலே’ என ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்தபடி வெளியே வந்தான் குமாரசாமி.
காலை வெளிச்சத்தில் குலுங்கிக் கொண்டிருந்தன செடிகள். மலர்ந்த பூக்கள் கண்களை இழுத்தன. மலரின் ஒவ்வோர் இதழிலும் அக்காவின் முகம் தெரிந்தது. சிரிப்பு தெரிந்தது. மீண்டும் மீண்டும் அதே நினைவுகளா என உடம்பு சிலிர்த்தது. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளின் தோள்களைத் தொட்டேன். அப்போதுதான் வீட்டு ஓனரம்மா கொடுத்தனுப்பியிருந்த தோசைகளைச் சாப்பிட்டு முடிந்திருந்தோம்.