சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும் ’எங்கள் பாட்டி எங்கள் தாத்தா’ தொகுதியிலிருந்து சில பாடல்கள்.
சென்னை புத்தகக்கண்காட்சியை ஒட்டி பாரதி புத்தகாலய வழியாக வெளிவந்திருக்கும் ’எங்கள் பாட்டி எங்கள் தாத்தா’ தொகுதியிலிருந்து சில பாடல்கள்.
நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் ஓர் அழகான ஏரி இருக்கிறது. அதன் கரையைச் சுற்றி பத்தடி அகலத்துக்கு அச்சுக்கல் பதிக்கப்பட்ட நடைபாதை உண்டு. நடப்பதற்குச் எவ்விதமான சிரமமும் இல்லாத பாதை.
இந்த உலகத்தில் பிறருடைய கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்க்கவும் அந்தச் சிந்தனைகளைச் சித்தரிக்கவும் தெரிந்தவர்கள் எழுத்தாளர்கள். கண்ணிமைக்கும் நேரங்களில் எல்லாப் பாத்திரங்களாகவும் உருமாறிச் சிந்தித்துப் பேசும் ஆற்றல் அவர்களுக்குக் கைவந்த கலை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருடைய பேச்சிலும் ஒரு தர்க்கம் இருக்கிறது. அது ஒரு கண்ணாடியைப் போல. அதன் வழியாக ஆழ்நெஞ்சில் இருப்பவற்றை அவர்களால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அத்தகு எழுத்தாளர்களுக்குக் கூட சவாலான ஒரு விஷயம் இருக்கிறது. அது குழந்தைகளைப்போல சிந்திப்பது மற்றும் குழந்தைகளுக்காக எழுதுவது.
ஒருநாள் மாலை வழக்கம்போல எங்கள் குடியிருப்புப் பகுதியை ஒட்டிய ஏரிக்கரையில் வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன். எனக்கு முன்னால் பத்து பதினைந்தடி தொலைவில் நாற்பது வயதையொட்டிய ஒருவர் ஏழெட்டு வயதுள்ள ஒரு சிறுவனின் விரல்களைப் பற்றிக்கொண்டு நடந்துகொண்டிருந்தார். அவர் அச்சிறுவனிடம் மெல்லிய குரலில் எதையோ சொல்லிக்கொண்டிருந்தார். தொலைவு காரணமாகவும் காற்றுவீச்சு காரணமாகவும் எதுவும் காதில் விழவில்லை. நடை சுவாரசியத்துக்காக ஏதேனும் ஒரு கதையை அச்சிறுவனுக்கு அவர் சொல்லிக்கொண்டிருக்கக்கூடும் என நானாகவே நினைத்துக்கொண்டேன். சிறுவயதில் என் தாத்தாவின் கையையும் அப்பாவின் கையையும் பற்றிக்கொண்டு நடந்த பழைய காலத்து நினைவுகள் ஓரிரு கணங்கள் மனத்தின் மூலையில் மின்னி மறைந்தன.
மாப்பிள்ளை பொம்மை
குடுகுடு தாத்தா வந்தாரு
கொழகொழ சேற்றை எடுத்தாரு
மடமட என்றே பிசைஞ்சாரு
மாப்பிள்ளை பொம்மை செஞ்சாரு
கொழுகொழு மாமா வந்தாரு
மழமழ பொம்மையை பார்த்தாரு
பளபள துணியை கிழிச்சாரு
தொளதொள சட்டை தைச்சாரு
வழக்கமாக கோடை விடுமுறை தொடங்கியதும் என் தம்பிகளின் குழந்தைகள் பெங்களூருக்கு வந்து சிறிது காலம் தங்கிவிட்டுச் செல்வார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வதும் பூங்காக்களுக்குச் செல்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூங்காவுக்குச் செல்வோம். ஒரு பள்ளித்தோழனிடம் பகிர்ந்துகொள்வது போல தம் வகுப்புகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் விளையாட்டுகளையும் பற்றியெல்லாம் என்னுடன் அப்பிள்ளைகள் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. பல சமயங்களில் நான் அவர்களுக்கு புதிதுபுதிதாக பாடல்களை எழுதிப் பாடிக் காட்டுவேன். அவர்களும் அவற்றை ஆசையோடு பயிற்சியெடுத்து படித்து பாடிக் காட்டுவார்கள்.