Home

Tuesday, 26 April 2016

வரலாற்றில் வாழ்வது


சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’

கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, அப்பாவோடு ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக ஒருநாள் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். வெகுதொலைவு நடந்த களைப்பில் ஒரு பூங்காவுக்கு எதிரில் நின்றிருக்கிறார். அங்கே ஏற்கனவே ஏராளமான மாணவர்கள் கூட்டம்கூட்டமாக நின்றிருக்கிறார்கள். அவர்கள் சுதந்திர வேட்கையுடன் கல்லூரியை விட்டு வெளியேறியவர்கள். ஒரு கூட்டம் நிகழ்த்துவதற்காக அங்கே சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பின்னணியைப்பற்றிய எந்தத் தகவலும் தெரியாமலேயே அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி அவர் சாலையோரமாக நின்றிருக்கிறார்.

Saturday, 16 April 2016

வஞ்சினங்களின் காலம் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)




வேட்டைச்சமூகம் ஆரம்பகாலத்தில் பசியைத் தணிக்கும் உணவுக்காக வேட்டையாடியது. பிறகு தற்காப்புக்காக வேட்டையாடியது. அதையடுத்து, வேட்டைப்பொருளுக்கு சமூகத்தில் ஒரு விலை உள்ளது என்று தெரிந்துகொண்டதும் வணிகத்துக்காகவும் வேட்டையாடியது. வேட்டையில் சாகசமும் வஞ்சினமும் இருமுனைகள். மனிதன்மீது விலங்கும் விலங்கின்மீது மனிதனும் கொள்ளும் வஞ்சினம் ஒருவகை. மனிதகுலமே ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் வஞ்சினம் வேறொரு வகை. வஞ்சினம் என்பது ஒரு கோணத்தில் அணையாத நெருப்பு. அது நெருங்கி வருபவர்களையும் எரித்துப் பொசுக்கும். வைத்திருப்பவர்களையும் எரித்துப் பொசுக்கும்.

Wednesday, 6 April 2016

வீடு (சிறுகதை)


உறக்கம் கலைந்து கண் விழித்ததுமே வலதுபக்கச் சுவரில் ஒட்டியிருந்த முருகரின் படத்தைப் பார்த்தான் வடிவேலு. மயில் விளையாடும் பாதத்திலிருந்து மணிமுடி வரைக்கும் அவன் பார்வை மெதுவாகப் படர்ந்து உயர்ந்தது. அக்கணத்தில் ஆஸ்பத்திரியிலிருந்து ராமாயி பெரியம்மாவை அழைத்துவர வேண்டும் என்பது நினைவிலெழுந்தது.

Monday, 28 March 2016

அப்பாவும் மகனும் - (திரைப்படம் பற்றிய கட்டுரை)



தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய ’அப்பாவின் தண்டனைகள்’ என்னும் நாவலைத்தான் முதலில் படித்தேன். அந்த நாவல் வழங்கிய அனுபவம் நெஞ்சில் இருக்கும்போதே, ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு இதழில் வெளிவந்த ‘பூனைகள் நகரம்’ என்னும் ஜப்பானியச் சிறுகதையை அடுத்து படித்தேன். (மூலம்: ஹாருகி முரகாமி) அசோகமித்திரன் கட்டியெழுப்பும் சீரான தந்தை-மகன் உறவு சார்ந்த படைப்புகளை தராசின் ஒரு தட்டில் வைத்தால், அதன் மற்றொரு தட்டில் மேற்சொன்ன படைப்புகளை வைக்கலாம் என்று தோன்றுகிறது. துரதிருஷ்டவசமாக சிதைந்த உறவை முன்வைக்கும் படைப்புகளின் சுமையால் தராசுத்தட்டு தரையை விட்டு மேலெழ வாய்ப்பே இருக்காதோ என்று நினைக்கிறேன்.

Thursday, 24 March 2016

தேவதேவனின் கவிதை வரிகள்


நண்பர் ஸ்ரீநிவாச கோபாலன் தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த நல்ல வாசகர். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என தேடித்தேடிப் படிப்பவர். படைப்புகளின் அழகைப் பேசிப்பேசி தம் குடும்பத்தினர் அனைவரையும் இலக்கிய வளையத்துக்குள் கொண்டுவந்துவிட்டவர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேவதேவன் கவிதைகளில் மூழ்கியிருந்தார்.

Thursday, 17 March 2016

சொர்க்கவாசல் (சிறுகதை)


வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை நான்கு மணிக்கு எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்துவந்த ஒரு பாட்டி இறந்துவிட்டாள். கம்பங்கள் நட்டு துணிக்கூரை விரித்து பாதையை அடைத்தபடி நீண்ட கண்ணாடிக் குளிர்ப்பெட்டிக்குள் அவளுடைய உடலை வைத்திருந்தார்கள். நடந்துசெல்ல மட்டும் இரண்டடி அகலத்துக்கு இடைவெளி இருந்தது. கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி நூறு நூற்றைம்பது நாற்காலிகள் போடப்பட்டு உறவுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். காரை எடுக்க வழியே இல்லை. 

Tuesday, 8 March 2016

நெஞ்சில் குடியிருக்கும் காந்தி - மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’


லங்கேஷ் பிரகாஷண என்னும் பதிப்பகம் கன்னட மொழியில் மிகச்சிறந்த புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் முக்கியமானதொரு அமைப்பாகும். மறைந்த கன்னட எழுத்தாளர் லங்கேஷுக்குச் சொந்தமான  பதிப்பகம். சமீபத்தில் அப்பதிப்பகம் தொண்ணூறு வயதைக் கடந்த எச்.எஸ்.தொரெஸ்வாமி என்னும் காந்தியவாதியின் தன்வரலாற்று நூலை வெளியிட்டது. புத்தகத்தின் தலைப்பு ‘நினைவுச்சுருளைப் பிரித்தபோது’. 1942ஆம் ஆண்டில் நந்தி மலைத்தொடர் விருந்தினர் விடுதியில் ஓய்வெடுப்பதற்காக காந்தி தங்கியிருந்தபோது இருபத்தி நான்கு வயதே நிரம்பிய இளைஞனான தொரெஸ்வாமி ஒருநாள் காலை பிரார்த்தனைக்கூட்டத்தில் காந்தியைச் சந்தித்தார். அவருடைய எளிமையான தோற்றமும் உரையும் அவரைக் கவர்ந்தன. அவரைப் பின்பற்றி நடக்கும் தீர்மானத்தை அக்கணத்திலேயே அவர் முடிவு செய்துவிட்டார். காந்தியக்கொள்கைகள் அவருடைய வாழ்க்கைக்கும் கொள்கைகளாகிவிட்டன. தன்னுடைய வாழ்க்கையையே அக்கொள்கைகளைச் சோதித்துப்பார்க்கும் களமாக வகுத்துக்கொண்டார். அறுபதாண்டுக்கும் மேலான பொதுவாழ்வில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இந்தப் புத்தகம் அமைந்திருந்தது. காந்தியத்தின் தொடர்ச்சி காந்தி இல்லாத இந்தியாவில் எவ்வாறு நிலைகொண்டிருக்கிறது என்பதை அறிவதற்கு இது ஒரு நல்ல புத்தகம்.