Home

Monday, 7 July 2025

இலக்கியச்சோலையின் ஆலமரம்

 

கடந்த ஆண்டில் வளவ. துரையன் எழுதிய ‘தடம் பதித்த தமிழர்கள்’ என்னும் புத்தகத்தைப் படித்தேன்.  வெவ்வேறு வகைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய பல ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டியெடுத்து சிறுசிறு கட்டுரைகளாக எழுதித் தொகுத்திருந்தார். மொத்தம் முப்பத்துநான்கு  கட்டுரைகள்.  அப்பட்டியலில் தெரிந்தவர்களும் இருந்தார்கள்.  தெரியாதவர்களும் இருந்தார்கள்.

தேர் நகர்ந்துகொண்டே இருக்கிறது

 

நான் கோவிந்தையர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் இராமச்சந்திரன் அண்ணன் “உனக்கு எத்தனை திருக்குறள் மனப்பாடமா சொல்லத் தெரியும்?” என்று கேட்டார். அவர் எங்கள் பெரியப்பாவின் மகன். ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு, வேலைக்காகக் காத்திருந்தார். நிலவழகன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். எங்கள் பாடப்புத்தகத்தில் செய்யுள் பகுதியில் இடம்பெற்றிருந்த குறள்கள் மட்டுமே அப்போது எனக்கு மனப்பாடமாகத் தெரியும். உடனடியாக அவற்றை மட்டும் நிறுத்தி நிதானமாக அவரிடம் சொன்னேன்.