கடந்த ஆண்டில் வளவ. துரையன் எழுதிய ‘தடம் பதித்த தமிழர்கள்’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். வெவ்வேறு வகைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய பல ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டியெடுத்து சிறுசிறு கட்டுரைகளாக எழுதித் தொகுத்திருந்தார். மொத்தம் முப்பத்துநான்கு கட்டுரைகள். அப்பட்டியலில் தெரிந்தவர்களும் இருந்தார்கள். தெரியாதவர்களும் இருந்தார்கள்.