Home

Monday, 2 August 2021

மிகையின் தூரிகை - புதிய சிறுகதைத்தொகுதி

 

இன்பத்திகைப்பில் ஆழ்ந்துபோகும் வகையில் நேற்று (30.07.2021)  ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம்போல நண்பகல் உணவு இடைவேளை சமயத்தில் அஞ்சல்காரர் வந்து அஞ்சல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றார். கொரானா சடங்குகளை முடிக்கும் வகையில் அவற்றை வாசலிலேயே சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பிறகு உள்ளே எடுத்துவந்தேன்.

Sunday, 1 August 2021

புன்னகையும் பரவசமும்

 

காந்தியடிகள் தன் வாழ்க்கைவரலாற்றைசத்திய சோதனைஎன்னும் தலைப்பில் நூலாக எழுதியுள்ளார். அதில் அவர் தன் குழந்தைப்பருவத்தைப் பற்றி ஒருசில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறார். ஒருமுறை அவர் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அரிச்சந்திரனின் வாய்மை தவறாத பண்பு அவரைக் கவர்ந்தது. சத்தியத்தின் மீது அரிச்சந்திரன் கொண்டிருக்கும் பற்று எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வழங்கிவிடுவதைப் பார்த்து அவர் வியப்படைந்தார். தன் வாழ்நாளில் சத்தியமே தனக்குரிய வழி என அக்கணத்தில் காந்தியடிகள் முடிவெடுத்தார்.

கன்னடப் பெண்படைப்பாளிகள் : சவால்களும் சாதனைகளும்

 

 அக்கா என கன்னட இலக்கிய உலகத்தாரால் அன்போடு அழைக்கப்பெறும் அக்கமகாதேவி என்கிற மகாதேவி அக்காவே கன்னட மொழியின் முதன்மைப் பெண்படைப்பாளி. கன்னட வசன இலக்கியத்தின் முக்கியமான ஆளுமை. அல்லமப்பிரபு, பசவண்ணர் வரிசையில் வைத்து மதிக்கப்படுபவர். இவர்கள் அனைவருமே வாழ்வனுபவத்தையும் ஆன்மிக அனுபவத்தையும் வசீகரமான வகையில் இணைத்து எழுதியவர்கள். சிவனை வெறும் இறையுருவமாக மட்டும் கருதாமல் நல்ல தோழனாக, நல்ல வழிகாட்டியாக, நல்ல துணையாக என பல்வேறு வடிவங்களில் உருவகிக்கின்றன இந்த வசனங்கள். இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு சிவனை தன் உள்ளம் கவர்ந்த மாமனிதனாக உருவகித்து எழுதியிருக்கிறார் அக்கமகாதேவி. மல்லிகார்ஜுனன் மீது அவர் கொண்ட பற்றையும் விருப்பத்தையும்  புலப்படுத்தும் அக்கமகாதேவியின் பாடல்கள் நாராயணன் மீது காதல் கொண்டு பாடப்பட்ட ஆண்டாளின் பாடல்களைப் போன்றவை.

Sunday, 25 July 2021

ஒரு வாசகர் இலக்கியத்திலிருந்து பெறுவது என்ன? - கட்டுரை

  

ஆங்கிலேயர் போற்றும் மாபெரும் நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர்.  அவர் எழுதிய நாடகங்கள் அனைத்தும் மேடையில் நடிக்கப்பட்டனவே தவிர, அவை நூல்வடிவம் பெறவில்லை. அவர் எழுதிய முப்பத்தாறு நாடகங்களில் அவர் உயிரோடு இருந்த காலத்தில்  பதினெட்டு நாடகங்கள் மட்டுமே நூல்வடிவம் பெற்றிருந்தன. எஞ்சியவை கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தன. அவருடைய மறைவுக்குப் பிறகு, அவருடைய நாடகங்களில் நடித்துவந்த ஜான் ஹெமிங்க்ஸ் என்பவரும் ஹென்றி கோண்டெல் என்பவரும் இணைந்து அனைத்து நாடகப் பிரதிகளையும் உள்ளடக்கி FIRST FOLIO என்னும் தலைப்பில் 1623இல் ஒரு தொகைநூலை அச்சிட்டு வெளியிட்டனர். இதுவே ஷேக்ஸ்பியரின்  முதல் நாடகத் தொகுப்புநூல். இவை 750 பிரதிகள் மட்டுமே அந்தக் காலத்தில் அச்சிடப்பட்டன. ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் கடந்த நிலையில் அச்சிட்ட பிரதிகளில் தற்சமயத்தில் எஞ்சியிருப்பவை 19 பிரதிகள் மட்டுமே. அவற்றில் நல்ல நிலையில் இருப்பது ஒரே ஒரு பிரதி மட்டுமே. ஒரு மதபோதகரின் நூலகத்தை ஏலத்தில் எடுத்த போது, இன்னொரு மதபோதகரின் கைக்குச் சென்றது அப்பிரதி. அவரே இன்றுவரை அப்பிரதியைப் பாதுகாத்து வருகிறார்.

இரண்டு தளங்கள் - முன்னுரை

  

போக்கிடம் நாவல் 1976இல் இலக்கியச்சிந்தனை அமைப்பின் விருதுக்குரிய நாவலாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதன்முதலாக வெளிவந்தது. 1984இல் என் திருமணத்துக்கு வந்திருந்த இலக்கிய நண்பரொருவர் அந்தப் புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார். அப்போதுதான் அதை முதன்முதலாகப் படித்தேன். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாகப் படித்தேன்.

காந்தி ஆசிரமம் கிருஷ்ணன் : தன்னடக்கத்தின் சிகரம்

         கதராடைகளை அணியவேண்டிய தேவையைப்பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவும் கதர்ப்பணிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டவும் 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் நாடு தழுவிய ஒரு நெடும்பயணத்தை மேற்கொண்டார். சபர்மதி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டு பீகார், மத்தியப்பிரதேசம் முழுதும் மூன்றுமாத காலம் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார். பிறகு பம்பாய் வழியாக கர்நாடகத்துக்கு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நிலை குன்றியது. ஏறத்தாழ நான்கு மாத காலம் அவர் கர்நாடகத்திலேயே தங்கியிருக்கவேண்டியிருந்தது.

Monday, 19 July 2021

தீரா வேட்கை - கட்டுரை

  

இன்றைய கவிதைப் படிமங்கள் இருவகையான சித்திரங்களை வாசகர்களுக்கு அளிக்கின்றன. ஒன்று துயரத்தின் சித்திரம். இன்னொன்று புன்னகையின் சித்திரம். இரண்டுமே மானுட வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத அம்சங்கள். இவையிரண்டும் மாறிமாறி நிகழ்ந்து வாழ்க்கையை ஒரு மாறாத புதிராகவே இந்த மண்ணில் நிலைநிறுத்துகின்றன. ஒவ்வொரு கவிஞனின் நெடும்பயணமும் அந்தப் புதிருக்கான விடையைத் தேடும் முயற்சிகளே. கதிர்பாரதியின் கவிதைகளை அத்தகு நெடும்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நவீன கவிஞனின் கையேட்டுக்குறிப்புகள் என்று சொல்லலாம்.