Home

Tuesday, 29 July 2025

தன்மானம்

  

அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். “வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா?” என்றபடி உள்ளே வந்தார் நண்பர். “வாங்க வாங்க” என்று அவரை வரவேற்று என் படிப்பு மேசைக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரும்படி கைகாட்டினேன். புத்தகத்தை மூடி மேசையில் வைத்துவிட்டுத் திரும்பினேன்.

Sunday, 20 July 2025

பிரபஞ்சத்தின் விளையாட்டு

 

கவிதைகளின் வடிவத்தில் காலம்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன. சங்ககாலக் கவிதைகளின் வடிவத்தைப்போல சங்கம் மருவிய காலகட்டத்தின் வடிவம் இல்லை. காப்பிய காலத்தில் மேலும் புதிய மாற்றங்கள் வந்து சேர்ந்தன. கவிராயர்கள் பெருகிய காலத்தில் இன்னும் புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தது.

வாழ்க்கை என்னும் புதிர்

  

நள்ளிரவு நேரத்தில் ஒருபக்கம் ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. மற்றொரு பக்கத்தில் உறங்கமுடியாமல் தவிக்கும் பெண் இரவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி துக்கத்தில் மூழ்கி தவியாய்த் தவித்தபடி இருக்கிறாள். இருவேறு விதமான இக்காட்சிகளை முன்வைத்து சங்ககாலம் முதல் எழுதப்பட்ட பாடல்வரிகள் ஏராளமாக உள்ளன.

Sunday, 13 July 2025

நினைக்கப்படும்

 

புதுச்சேரியிலிருந்து நண்பரொருவர் பெங்களூருக்கு வந்திருந்தார். கல்லூரியில் என்னோடு ஒன்றாகப் படித்தவர் அவர். அவருடைய மகள் வீடு மாரதஹள்ளிக்கு அருகில் இருந்தது. வந்து இறங்கியதுமே கைப்பேசியில் அழைத்து ”நான் மூனு நாள் இங்க இருப்பேன். ஒருநாள் நான் கெளம்பிவந்து உங்களைப் பார்க்கட்டுமா? எந்த நேரம் உங்களுக்கு வசதியா இருக்கும்?” என்று கேட்டார். “அவசரப்படாதீங்க. வடக்கு தெற்கு புரியாத ஊருல உங்களுக்கு எதுக்கு அலைச்சல்? நானே வந்து பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு முகவரியை மட்டும் கேட்டு வாங்கிக் குறித்துக்கொண்டேன்.  ஆனால் புறப்படுவதற்கு உகந்ததாக அன்றைய பொழுது அமையவில்லை. மறுநாள்தான் புறப்பட முடிந்தது.

அற்புத உலகம்

 

இரு மாதங்களாக புக் டே இணைய தளத்தில் மூத்த எழுத்தாளரான விட்டல்ராவ் எழுதும் ‘வகுப்பறைக்கதைகள்’ என்னும் தொடரை ஒவ்வொரு வாரமும் படித்து வருகிறேன். அனைத்துக்கதைகளும் அவர் தொடக்கப்பள்ளியில் பயின்ற காலத்தில் வகுப்பறைகளில் நடைபெற்ற மறக்கமுடியாத நிகழ்ச்சிகள், படித்த பாடங்கள், பாடல்கள்,  சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் தொடர்பான நினைவலைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது.

Monday, 7 July 2025

இலக்கியச்சோலையின் ஆலமரம்

 

கடந்த ஆண்டில் வளவ. துரையன் எழுதிய ‘தடம் பதித்த தமிழர்கள்’ என்னும் புத்தகத்தைப் படித்தேன்.  வெவ்வேறு வகைகளில் தமிழுக்குத் தொண்டாற்றிய பல ஆளுமைகளைப்பற்றிய தகவல்களைத் திரட்டியெடுத்து சிறுசிறு கட்டுரைகளாக எழுதித் தொகுத்திருந்தார். மொத்தம் முப்பத்துநான்கு  கட்டுரைகள்.  அப்பட்டியலில் தெரிந்தவர்களும் இருந்தார்கள்.  தெரியாதவர்களும் இருந்தார்கள்.

தேர் நகர்ந்துகொண்டே இருக்கிறது

 

நான் கோவிந்தையர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் இராமச்சந்திரன் அண்ணன் “உனக்கு எத்தனை திருக்குறள் மனப்பாடமா சொல்லத் தெரியும்?” என்று கேட்டார். அவர் எங்கள் பெரியப்பாவின் மகன். ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு, வேலைக்காகக் காத்திருந்தார். நிலவழகன் என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வந்தார். எங்கள் பாடப்புத்தகத்தில் செய்யுள் பகுதியில் இடம்பெற்றிருந்த குறள்கள் மட்டுமே அப்போது எனக்கு மனப்பாடமாகத் தெரியும். உடனடியாக அவற்றை மட்டும் நிறுத்தி நிதானமாக அவரிடம் சொன்னேன்.