அழைப்புமணி ஒலிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். “வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா?” என்றபடி உள்ளே வந்தார் நண்பர். “வாங்க வாங்க” என்று அவரை வரவேற்று என் படிப்பு மேசைக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமரும்படி கைகாட்டினேன். புத்தகத்தை மூடி மேசையில் வைத்துவிட்டுத் திரும்பினேன்.