Home

Sunday, 26 September 2021

பார்வை - சிறுகதை

 

மது நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இல்லத்தில் ஒரு மாதம் கழித்து நடக்கவிருக்கும் ஆண்டுவிழாவில் போட்டிகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செல்லப்பா. திடீர்திடீரென்று அலுவலக ஆணைக்குக் கட்டுப்பட்டு மும்பை, கொச்சின், கல்கத்தா என்று புறப்பட்டுச் செல்கிற சூழல்களுக்கிடையே பணிபுரிகிறவன் இப்படியெல்லாம் விசேஷநிகழ்ச்சிக்கு தீர்மானமாக தேதி ஒதுக்கித்தருவதில் இருக்கிற சிரமங்களை அவருக்குப் புரியவைப்பது எப்படி என்று தடுமாற்றமாக இருந்தது. பத்திரிகைகளில் கதையெல்லாம் எழுதுகிறவன் கேட்டால் மறுக்கமாட்டான் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வந்திருந்தார். 

மாறுபட்ட கோணங்கள் - புத்தக அறிமுகம்


     நவீன சிறுகதைக்கான பாதையை உருவாக்கிய படைப்பாளிகளில் முக்கியமானவர் ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ். அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி 1884இல் வெளிவந்தது. கச்சிதமான வடிவ அமைப்பு, நுட்பமான சித்தரிப்பு, வசீகரமான மொழி ஆகியவற்றின் காரணமாக இலக்கிய உலகில் அவருடைய சிறுகதைகளுக்கான இடம் அப்போதே உறுதிப்பட்டுவிட்டது. அடுத்த இருபதாண்டுகளில் அவர் எழுதிய சிறுகதைகள் பதிமூன்று தொகுதிகளாக வெளிவந்தன. ரஷ்யாவுக்கு வெளியே பல மொழிகளில் அக்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன. அவற்றின் வழியாக உலகெங்கும் அவருக்கு வாசகர்கள் உருவானார்கள். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கும் புதிய தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படும் எழுத்தாளராகவும் மீண்டும் மீண்டும் மொழிபெயர்க்கப்படும் எழுத்தாளராகவும் விளங்குகிறார் ஆன்டன் செகாவ்.

Wednesday, 22 September 2021

குழந்தைப்பாடல்கள் : வகைகளும் வளர்ச்சியும்

  

குழந்தைப் பாடல்களை இரண்டு பெரும்பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். முதல் பிரிவில் குழந்தைகள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தாமே சொற்களைக் கூட்டிக்கூட்டி உருவாக்கும் பாடல்கள் அடங்கும். குழந்தைகளின் மனநிலைக்கு இணையாக தம் மனநிலையை தகவமைத்துக்கொள்ள முடிந்த பெரியவர்கள், குழந்தைகளின் பார்வையில் ஒவ்வொன்றயும் பார்த்து சொற்களை இணைத்து உருவாக்கும் பாடல்கள் இரண்டாவது பிரிவில் அடங்கும்.

’அக்பர் சாஸ்திரி’ சிறுகதைகள் : பாலைவனக்கள்ளி படர்ந்திருக்கும் உலகில்


நடந்தாய் வாழி காவேரி புத்தகத்தைப்பற்றி ஒருநாள் என் கன்னட நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். நதியை ஒட்டிய பயணம் என்பதைக் கேட்டு அவர்கள் மலைத்துவிட்டார்கள். அதுவும் முன்னொரு காலத்தில் நிகழ்ந்த பயணம் என்பதைக் கேட்டு அவர்களுடைய வியப்பு பல மடங்காகப் பெருகியது. அப்படி ஒரு பயணம் நாமும் செல்லவேண்டும் என்று கனவு மிதக்கும் கண்களோடு ஒவ்வொருவரும் மாறிமாறிச் சொன்னார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அப்படி ஒரு தருணம் வாய்க்கவே இல்லை. அதனால் ஒரு மாற்றுத் திட்டமாக ஒருநாள் பயணமாக சிவசமுத்திரம், தலக்காடு, திருமுக்கூடல், சோமநாதபுர ஆகிய இடங்களுக்கு மட்டும்  சென்றோம். அருவிச்சாரல், சோழர் காலத்துக் கோவில், ஒரு காலத்தில் ஊரையே மூடியிருந்த மணல்மேடு, குறுகியும் விரிந்தும் பரவியோடும் காவிரி என எண்ணற்ற காட்சிகளைக் கண்டு மகிழ்ந்துவிட்டுத் திரும்பினோம். என்னிடம் அப்போதுதான் புதுசாக வாங்கிய ஒரு டிஜிட்டல் கேமிரா இருந்தது. அதைப் பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான படங்களை எடுத்தேன்.

Tuesday, 21 September 2021

புன்னகை பூக்க வைக்கும் வரிகள்

 

கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் நவீன கல்வியின் அறிமுகத்துக்குப் பிறகு குழந்தைகளுக்கான பாடல்களுக்கும் கதைகளுக்கும் ஓர் அவசியத்தேவை உருவானது. அதையொட்டி குழந்தைகளுக்கென எழுதும் பல கவிஞர்களும்  கதையாசிரியர்களும் உருவாயினர். ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆங்கிலவழிக் கல்வி எங்கெங்கும் வேரூன்றி தழைத்துப் பெருகத் தொடங்கியதும், அந்தத் தேவை மெல்ல மெல்ல குறைந்து இல்லாமலானது.

Sunday, 19 September 2021

காதலென்னும் ஊஞ்சல் - புத்தக அறிமுகம்

     

சூர்யநிலாவின் கவிதைத்தொகுதியின் முகப்பில் பரணர் எழுதிய நற்றிணைப்பாடலை வழங்கியிருப்பது ஏதோ ஒரு வகையில் புதுமையாகத் தோன்றியது. முன்னுரை வாக்கியங்களைப்போலத் தோன்றிய அப்பாடல் வரிகள் கவிதைத்தொகுதிக்குள் அழைத்துச் செல்ல, வாசலில் நின்று வரவேற்பதுபோலத் தோன்றியது. என்ன தொடர்பு இருக்கக்கூடும்  என்றொரு கேள்வி ஒரு பறவையைப்போல சிறகடித்தபடி இருக்க, அப்பாடலை நாலைந்து முறை படித்துவிட்டேன். அதன் உள்ளோசைக்காக ஒரு முறை. அதன் காட்சியமைக்காக ஒரு முறை. அதன் கற்பனையழகுக்காக ஒரு முறை. அதன் பொருளுக்காக ஒரு முறை. படிக்கப்படிக்க அதன் அழகு பெருகியபடியே இருந்தது.  

ஜி.இராமச்சந்திரன்: இலட்சியப்பறவை


1920இல் நாகர் கோவிலில் ஸ்காட் கிறித்துவ உயர்நிலைப்பள்ளியில் படித்துவந்த பதினாறு வயது நிரம்பிய ஒரு மாணவருக்கு பள்ளிக்கூட நூல்களுக்கு அப்பால் யங் இந்தியா பத்திரிகையைப் படிக்கும் பழக்கம் இருந்தது. அதில் தீண்டாமையை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தைப்பற்றி காந்தியடிகள் எழுதும் கட்டுரைக்குறிப்புகளை அந்த மாணவர் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்துவந்தார். திருவனந்தபுரத்தில் தேசியக்கல்வியைப் புகட்டும் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்த அம்மாணவருடைய மாமாவான மார்த்தாண்டன் தம்பியின் நெருக்கத்தால் தீண்டாமை என்னும் சமூகத்தீமையைப்பற்றி ஏற்கனவே அவர் கொண்டிருந்த எண்ணம் காந்தியடிகளின் கட்டுரையைப் படித்ததைத் தொடர்ந்து ஆழமாக வேரூன்றியது.