Home

Sunday, 9 March 2025

திசை தேடும் பறவை

 

தாத்தாவின் முடிவு குறித்து யாருக்கும் திருப்தி இல்லை. அபரிமிதமான சோர்வும் துக்கமும் கொண்டிருந்தார் அப்பா. தத்தளிக்கும் உணர்ச்சிகளை அவர் முகம் அப்பட்டமாய் வெளிக்காட்டியது. கண்டமங்கலம் சித்தப்பாவும், பாக்கியம் அத்தையும் எதுவும் பேசமுடியவில்லை. புடவை முந்தானையால் வாயை மூடிக்கொண்டு, கதவுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டு அம்மா அழுதாள். தாத்தாவோ மகிழ்ச்சி, துக்கம் எதையும் காட்டிக்கொள்ளாத முகத்துடன் இருந்தார். புரிதல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மர்மச் சித்திரமாய் இருந்தது அவர் முக உணர்ச்சி. பொங்கல், தீபாவளி சமயங்களில் காலில் விழுந்து வணங்கி எழுகிற மாதிரி அன்றைய தினம் எல்லாரும் விழுந்து கும்பிட்டோம். எல்லோரின் தலையையும் ஆதரவுடன் தொட்டு ஆசிர்வாதம் செய்துவிட்டு தாத்தா விடை பெற்றுக்கொண்டார்.

சரண்

 

அந்த இடத்தைக் கோயில் என்று சொல்லமுடியாது. அது இருந்த கோலம் அப்படி. மணிகண்டசாமி இருந்தவரைக்கும் சுத்தபத்தமாகத்தான் இருந்தது. ஐயப்பனுக்கு பக்தர்களும் பெருகிக்கொண்டு வந்தார்கள்.   இருதய நோயிலிருந்து பிழைத்து எழுந்ததற்காக ஐயப்பனுக்கு நன்றி செலுத்துகிறவண்ணம் நாற்பதுக்கு நாற்பது அடி தேறுகிற இடம் ஒன்றை வாங்கித் தானமாகக் கொடுத்திருந்தார் நமசிவாயம் செட்டியார். அதற்கு நடுவில்தான் பதினெட்டு படிகளும் ஐயப்பன் சிலையும்

Sunday, 2 March 2025

கையெழுத்து

 

அத்தையை அவசரமாக அழைத்துவரச் சொன்னாள் அம்மா. “நாளைக்கு பரீட்ச இருக்குது. கணக்கு போட்டு பாக்கற நேரத்துல வேல வச்சா எப்படிம்மா? மார்க் கொறஞ்சா திட்டறதுக்கு மட்டும் தெரியுதே, இது தெரிய வேணாமா?” என்ற என் சிணுங்கல்கள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை. “அவசரத்துக்கு ஒரு வேல சொன்னா ஆயிரம் தரம் மொணங்கு. பெரிசா மார்க் வாங்கி கிழிச்சிட்ட போ. சீக்கிரமா கூட்டிட்டு வாடா போஎன்று அதட்டி விரட்டினாள் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். “போனமா, வந்தமான்று சீக்கிரமா வந்து சேரு. அந்த ஊரு காலேஜ் வண்டி வந்துது. இந்த ஊரு காலேஜ் வண்டி வந்ததுன்னு பெராக்கு பாத்துக்கினு நின்னுடாதஎன்று பேசிக்கொண்டே இருந்தாள் அம்மா.

வழி


வனாந்திரமான இடத்தில் பெரியபெரிய புகை போக்கிகள் முளைத்த கல் கட்டிடத்தின் கம்பீரம் தெருவில் போகும் யாரையும் திரும்ப வைத்துவிடும். இதே பாதையில் வேலை சம்பந்தமாய் நான் அலைய ஆரம்பித்து ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். என் வேலைக்கென்றே இலாக்கா மோட்டார் சைக்கிள் ஒன்று என் வசமிருந்தது