Home

Sunday, 5 October 2025

இமயமலை : ஒரு பண்பாட்டுப்பயணம்

  

புதுச்சேரியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே ஒரு நூலகம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அந்த நூலகத்துக்குச் சென்று படிப்பேன். அவ்விதமான வாசிப்பில் என் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று ஜீவன்லீலா.  சாகித்திய அகாதமி வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எழுதியவர் காகா காலேல்கர். ஆங்கிலம் வழியாக, பி.எம்.கிருஷ்ணசாமி என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.

நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம்




சென்னையை நாங்கள் பெயரளவில் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு அதை எப்போது பார்ப்போம் என ஏங்கியிருந்த ஒரு காலம் உண்டு. அப்போது அந்த நகரத்தைப் பார்த்தவர்கள் சொல்கிற ஒவ்வொரு செய்தியும் எங்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும்.

மகத்தான இயற்கை ஆர்வலர் : கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு அஞ்சலி

 

பள்ளிக்கூடத்தில் நான் படித்துவந்தபோது, காடு, விலங்குகள் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்துவந்தேன். ஐம்பது, நூறு மரங்களைக் கொண்ட தோப்பைப் பார்த்தாலே பரவசமுறும் வயதிலிருந்த எனக்கு காட்டைப்பற்றிய சித்திரங்களை அளித்த படைப்புகள் என் வாசிப்புக்கு உகந்தவையாக இருந்தன. அன்று முழுதும் கற்பனையில் திளைத்திருக்க அச்சித்திரங்களே போதுமானவையாக இருக்கும்.