ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன் மருமகளை ஒரு சர்வாதிகாரியைப்போல ஒவ்வொரு நாளும் ஆட்டிப் படைத்துவந்தாள். உட்கார் என்றால் உட்கார வேண்டும். எழுந்திரு என்றால் எழுந்திருக்கவேண்டும். சொன்ன வேலையைச் செய்யவேண்டும். அந்த வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். அதை மீறி ஒருவர் கூட ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாது.