Home

Sunday, 26 October 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - புத்திசாலி மருமகள் -1

 

ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு இருந்தது. அந்த வீட்டில் ஒரு அம்மாவும் அவளுடைய மகனும் மருமகளும் வசித்துவந்தார்கள். அந்த அம்மா ஒரு கொடுமைக்காரி. அவள் தன் மருமகளை ஒரு  சர்வாதிகாரியைப்போல ஒவ்வொரு நாளும் ஆட்டிப் படைத்துவந்தாள்.  உட்கார் என்றால் உட்கார வேண்டும். எழுந்திரு என்றால் எழுந்திருக்கவேண்டும். சொன்ன வேலையைச் செய்யவேண்டும். அந்த வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். அதை மீறி ஒருவர் கூட ஒரு வார்த்தை சொல்லிவிட முடியாது.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - புத்திசாலி மருமகள் -2

( தொடர்ச்சி....)

மாமியார் அரைமனத்தோடு மருமகள் சொன்ன செய்தியை மணியக்காரருக்குச் சொல்லி அனுப்பினாள். மணியக்காரரும் அப்போதே சம்மதம் தெரிவித்துவிட்டார். கோவில் ஆள் மாமியாரின் வீட்டுக்கு வந்து செய்தியைத் தெரிவித்துவிட்டுச் சென்றான்.

Sunday, 19 October 2025

உப்பு - சிறுகதை

 

முத்துக்கண்ணு விழுப்புரம் போகத் தொடங்கிவிட்டான். தரகுக்காரன் வீட்டுக்கும், வியாபாரி ரங்கசாமி வீட்டுக்கும் நடையாய் நடந்து மண்டியில் சேர்த்து விட்டாள் அம்மா.

கடல் கடந்த வாழ்வும் இலக்கிய ஆர்வமும்

 

தமிழின் தொன்மைநூலான தொல்காப்பியத்தை இலக்கணம் சார்ந்த நூலாக மட்டுமே சுருக்கிப் பார்க்கிற ஒரு பார்வை இன்றைய இளைஞர்களிடையில் வளர்ந்து நிற்கிறது. ஆனால் அது மிகமுக்கியமான வாழ்வியல் நூல் என்பதையும் அது எழுதப்பட்ட காலத்திலிருந்து பல தலைமுறையினரைக் கடந்து பலராலும் படிக்கப்பட்ட நூல் என்பதையும் பலர் மறந்துவிடுகின்றனர். ஆயினும் தமிழின் நல்லூழாக, தொல்காப்பியத்தை மறக்காதவர்களாகவும் அதை வாழ்வியல் நெறிநூலாக நினைப்பவர்களும் இன்றும் பலர் நம்மிடையில் வாழ்ந்துவருகின்றனர். அத்தகையோர் தொல்காப்பியத்தை ஆர்வத்தோடு மீண்டும் மீண்டும் விரும்பிப் படிப்பது மட்டுமன்றி, தேடி வருபவர்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றனர்.

Saturday, 11 October 2025

ஒரு குடிசை காத்திருக்கிறது

 

பள்ளிக்கூட அனுபவமொன்று நினைவில் எழுகிறதுஎங்கள் ஆசிரியர் ஒருமுறை எங்கள் ஊருக்கு அருகில் இருந்த வீடூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார்கடல்போல தளும்பிய அந்தத் தண்ணீர்ப்பரப்பை அன்று ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும் மணிக்கணக்கில் வேடிக்கை பார்த்தோம்பொழுதுபோவது தெரியாமல் மாலை வரைக்கும் விளையாடிவிட்டு ஊருக்குத் திரும்பினோம்.

பேராசையின் அழிவுப்பாதை

  

திருஞானசம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைப்பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அவற்றின் பெயர்கள் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம் ஆகும். கால ஓட்டத்தில் எலிவிருத்தமும் கிளிவிருத்தமும் காணாமல் போயின. எஞ்சியிருப்பது நரிவிருத்தம் மட்டுமே.

ஒரு வெற்றிக்குப் பின்னால்

 

எண்பத்தைந்து வயதைக் கடந்த எழுத்தாளரான சுப்ர.பாலன் கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், பயணக்கட்டுரைகள், ஆன்மிகக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருகிறார். அவருடைய படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள் என பல இதழ்களில் இடம்பெற்று வருகின்றன.

Sunday, 5 October 2025

இமயமலை : ஒரு பண்பாட்டுப்பயணம்

  

புதுச்சேரியில் நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது எங்கள் தாத்தா வீட்டுக்கு அருகிலேயே ஒரு நூலகம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் அந்த நூலகத்துக்குச் சென்று படிப்பேன். அவ்விதமான வாசிப்பில் என் மனம் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று ஜீவன்லீலா.  சாகித்திய அகாதமி வெளியிட்ட அந்தப் புத்தகத்தை எழுதியவர் காகா காலேல்கர். ஆங்கிலம் வழியாக, பி.எம்.கிருஷ்ணசாமி என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருந்தார்.

நிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம்




சென்னையை நாங்கள் பெயரளவில் மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு அதை எப்போது பார்ப்போம் என ஏங்கியிருந்த ஒரு காலம் உண்டு. அப்போது அந்த நகரத்தைப் பார்த்தவர்கள் சொல்கிற ஒவ்வொரு செய்தியும் எங்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும்.

மகத்தான இயற்கை ஆர்வலர் : கொ.மா.கோதண்டம் அவர்களுக்கு அஞ்சலி

 

பள்ளிக்கூடத்தில் நான் படித்துவந்தபோது, காடு, விலங்குகள் தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படித்துவந்தேன். ஐம்பது, நூறு மரங்களைக் கொண்ட தோப்பைப் பார்த்தாலே பரவசமுறும் வயதிலிருந்த எனக்கு காட்டைப்பற்றிய சித்திரங்களை அளித்த படைப்புகள் என் வாசிப்புக்கு உகந்தவையாக இருந்தன. அன்று முழுதும் கற்பனையில் திளைத்திருக்க அச்சித்திரங்களே போதுமானவையாக இருக்கும்.