1857இல் கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவத்தில் ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வங்காளத்தில் இருந்த கவர்னர் கட்டளையிட்டார். உடனே மெட்ராஸிலிருந்த இராணுவப்பிரிவு நீல் என்னும் ஆங்கில அதிகாரியின் தலைமையில் புறப்பட்டுச் சென்று எண்ணற்ற சிப்பாய்களைக் கொன்று குவித்து மோதலை அடக்கியது. நெருக்கடியான தருணத்தில் அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் விதமாக அன்றைய அரசு, மெளண்ட் ரோடில் ஸ்பென்சருக்கு அருகில் நீலுக்கு மாபெரும் உருவச்சிலையை வைத்தது.