Home

Saturday 31 August 2024

மரங்களும் மனிதர்களும்


ழான் ழியோனோ ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். அமெரிக்க இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்திலிருந்து 1953 ஆம் ஆண்டில் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போது அந்த இதழில் நான் சந்தித்த வியக்கத்தக்க மனிதர் என்னும் தலைப்பில் தொடர்கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன

வெறுப்பும் வேதனையும்

 

அன்புள்ள நண்பர்களே, எல்லாருக்கும் என் மாலை வணக்கங்கள். கடந்த ஐந்தாண்டுக் காலமாக தொடர்ச்சியாக இலக்கிய இதழ்களை வாசித்துக்கொண்டு வரும் ஒரு வாசகனுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. பிரெஞ்சு மொழியின் சில முக்கியமான ஆக்கங்களை தமிழில் மொழியாக்கம் செய்து வழங்குகிறவராகவும் பிரெஞ்சு மொழியின் இலக்கிய ஆளுமைகளைப்பற்றி அறிமுகம் செய்பவராகவும் அவர் திகழ்ந்து வந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்ல, குறிப்பிடத்தகுந்த நாவலாசிரியராகவும் அவர் தொடர்ந்து இயங்கி வருகிறார். திண்ணை இணையஇதழ் அவருடைய படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

சலியாதிரு ஏழை நெஞ்சே

 

1968இல் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணி கிராமத்தில் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நாற்பத்து நான்கு பேர் கொல்லப்பட்டபோது,  அந்த நிகழ்ச்சியைக் கண்டித்து ஏராளமான படைப்புகள் எழுதப்பட்ட. அவற்றில் ஞானக்கூத்தன் எழுதிய கவிதையொன்று  மிகமுக்கியமானது. 

Sunday 25 August 2024

நீதிக்குத் தவித்த நெஞ்சம்

 

நாம் படிக்கும் புத்தகங்கள் பலவிதமானவை. சில புத்தகங்கள் வாழ்வனுபவங்களின் இனிமையான நினைவுகளை முன்வைப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் கரடுமுரடான பக்கங்களையும் அவற்றை வெல்லும்பொருட்டு மானுடன் எடுக்கும் முயற்சிகளையும் சித்தரிப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் புதிர்களை விடுவித்துக்காட்டும். வேறு சில புத்தகங்கள் வரலாற்றின் பின்னணியில் மனிதகுலம் சந்தித்த ஏற்றங்களையும் தாழ்வுகளையும் தொகுத்துக்காட்டி சில மதிப்பீடுகளை வாசகர்கள் மனத்தில் உருவாக்க முயற்சி செய்யும். இன்னும் சில புத்தகங்கள் வாசகர்களை உடனடியாக பதற்றம்கொள்ளச் செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பாத்திரங்களின் வலியையும் வேதனையையும் தாமும் உணர்ந்து துக்கத்தில் ஆழ்த்தும். மீளாத் துயரிலிருந்து மானுடனை மீட்டெடுப்பதற்காக உருவான அரசியல் அமைப்பும் நிர்வாகமும் மற்ற வேறுவேறு துறைகளும் எதிர்மறையான விதத்தில் அதே மானுடனை புழுவினும் கீழாக மதித்து நசுக்கி தான்தோன்றித்தனமான விதத்தில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதைப் படம்பிடித்துக் காட்டும். பேராசிரியர் டி.வி.ஈச்சரவாரியார் மலையாளத்தில் எழுதி, தமிழில் குளச்சல் மு.யூசுப் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘ இறுதியாகக் குறிப்பிட்ட வகையைச் சார்ந்த புத்தகமாகும்.

ஏணிப்படிகளில் ஒரு பயணம்

  

வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பைத் தேடி சிற்றூரிலிருந்து பெருநகரைநோக்கி வந்த இரண்டு நண்பர்களைப்பற்றிய கதையாக விரிவடைந்திருக்கிறது பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’. தொட்டதும் அல்லது தட்டியதும் திறந்துவிடும் கதவுகளாக வாய்ப்புகள் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தவமாய்த் தவமிருந்து ஒரு கதவின் திறத்தலுக்காக காலம் முழுக்க அலைய வேண்டியிருக்கிறது. செல்லும் இடங்களிலெல்லாம் மூடிய கதவுகளையே கண்டுகண்டு மனம் சலித்துப் போகிறவர்கள் உண்டு. எப்போதோ ஒருமுறை அபூர்வமாகத் திறக்கும் கதவுகள் வேண்டப்பட்ட ஒரு சிலரைமட்டுமே உள்ளே அனுமதித்துக்கொண்டு மீண்டும் மூடிக்கொள்கின்றன. 

உறைதலும் உயிர்ப்பித்தலும்


கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் இயங்கிவரும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இரா.முருகன். பல சிறுகதைகள்மூலம் இலக்கிய உலகில் ஏற்கனவே அழுத்தமான தடங்களைப் பதித்தவர். கணிப்பொறி உலகைச் சார்ந்தவர். உலகில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி பலவிதமான அனுபவங்களைப் பெற்றவர். இணைய தளங்களில் இவர் பகிர்ந்துகொள்ளும் பலவிதமான அனுபவக்குறிப்புகள் வாசகவரவேற்பைப் பெற்றவை. இவர் ஏற்கனவே எழுதிய “அரசூர் வம்சம்” என்னும் நாவல் இணைய தளத்திலேயே தொடராக வெளிவந்தது. “மூன்று விரல்” நாவலும் இணைய தளமொன்றில் தொடராக இடம்பெற்று இப்போது நூல்வடிவில் பிரசுரமாகியிருக்கிறது.

Sunday 18 August 2024

கலைச்செல்வியின் கதைகள் – இரண்டு பின்னல்கள்

 

சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பேசுபொருளாக விளங்கும் புகழ்பெற்ற ஓவியங்களின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே பைபிள் கதைகளை மையமாகக் கொண்டவை. புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு சார்ந்த பல தருணங்களையே அந்த ஓவியங்கள் முன்வைத்திருந்தன. லியோனார்டோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்செலோ, பெலினி, எல் கிரெசோ என உலகப்புகழ் பெற்ற ஓவியக்கலைஞர்கள் தீட்டிய ஓவியங்கள். ஒருவகையில் உலக ஓவிய வரலாற்றை அந்தப் படங்களைக்கொண்டே ஒரு பார்வையாளரால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். இருபது முதல் இருபத்தைந்து படங்கள் மட்டுமே போதிய இடைவெளியுடன் அந்தக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.

அறிவுப்பெட்டகத்தின் வரலாறு

  

ஆற்றுப்படை இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று. ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் அல்லது வழிப்படுத்துதல் என்று பொருள். ஓர் அரசனையோ அல்லது வள்ளலையோ சந்தித்து தன் வறுமையைப் போக்கிக்கொள்ளும் விதமாக போதுமான செல்வத்தைப் பெற்றுவந்த ஒருவர் திரும்பி வரும் வழியில் சந்திக்க நேரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரிடம் அவருடைய சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை. பத்துப்பாட்டுத் தொகுப்பில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன. கால ஓட்டத்தில் மரபுவழிப்பாடல்கள் குறையக்குறைய, இந்த வகைமையிலான பாடல்களை எழுதுவதும் நின்றுவிட்டது.

Sunday 11 August 2024

ஆழ்மனத்தில் உள்ள கனவு

 

வீட்டில் வளரும் குழந்தைக்கு புற உலக அறிமுகமும் பிற உயிர்களைப்பற்றிய அறிமுகமும் முதன்முதலாக அந்தக் குழந்தையைச் சூழ்ந்து வாழும் பெரியவர்களின் சொற்கள் வழியாகவே அறிமுகமாகிறது. காக்கையை முதன்முதலாகப் பார்க்கும் எந்தக் குழந்தைக்கும் அதன் பெயர் காக்கை என்று தெரியாது. அதை ஒரு சொல்லாக முதலில் கேட்டுப் பழகி மனத்தில் இருத்திவைத்துக்கொள்கிறது. நேருக்கு நேராக ஒரு காக்கையைப் பார்த்துப் பரவசத்தோடு துள்ளிக் குதிக்கும்போது, அதற்கு அருகில் நிற்கும் யாரோ ஒருவர் அதை காக்கை என்று அடையாளப்படுத்துகிறார். அதற்குப் பிறகு அக்குழந்தை அந்தச் சொல்லையும் அந்தப் பறவையின் வடிவத்தையும் இணைத்து ஆழ்நெஞ்சில் பதிய வைத்துக்கொள்கிறது. ஒரு காட்சியனுபவமும் கேள்வியனுபவமும் இணைந்து அக்குழந்தையின் பிஞ்சு மனத்தில் அந்த வடிவம் பதிவாகிறது.  ஒவ்வொரு நாளும் அதன் ஞானம் எல்லையில்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது.

தெரிந்ததும் தெரியாததும்

  

கடந்த மாத இறுதியில் என் மனைவியுடைய தங்கை விடுமுறையில் குடும்பத்தோடு வந்திருந்தார். அவர்களுடைய மகன் கணிப்பொறித்துறையில் பணிபுரிபவன். அவனுக்கு விடுமுறை அமையும் காலமே அவர்களுக்கும் விடுமுறைக்காலம். எங்காவது மூன்று நாட்கள் சேர்ந்து தங்குவதுபோலத் திட்டமிடச் சொன்னார்கள். நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு குடகுமலை அடிவாரத்தில் உள்ள மடிக்கேரிக்குச் சென்று தங்கிவிட்டு வரலாம் என்று முடிவெடுத்தோம்.

Monday 5 August 2024

காந்திய வழி என்னும் ஆலமரம்

  

தென்னாப்பிரிக்காவிலிருந்து 09.01.1915 அன்று காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பிவந்தார். பிறகு  கோகலேயின் ஆலோசனைப்படி இந்தியாவின் நிகழ்முறைகளைப் புரிந்துகொள்வதற்காக ஓராண்டுக் காலம் தேசமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். அப்பயணத்தின் தொடர்ச்சியாக லக்னோ நகருக்கு வந்து 1916ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் சம்பாரண் விவசாயிகளின் துன்பங்களை முன்வைத்துப் பேசுவதற்காகச் சென்ற ராஜ்குமார் சுக்லா காந்தியடிகளைச் சந்தித்து சம்பாரணுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.  விரைவில் கல்கத்தாவுக்கு வரவிருப்பதாகவும் அப்போது சம்பாரணுக்கு வருவதாகவும் சுக்லாவுக்கு வாக்களித்தார் காந்தியடிகள்.

மனத்தை அறியும் கலை

 மேடையிலே அமர்ந்திருக்கின்ற எழுத்தாளுமைகளுக்கும் அரங்கிலே அமர்ந்திருக்கின்ற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்.  இந்த நாள் தமிழிலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான நாள்தொடர்ந்து  தமிழ் எழுத்துலகில்  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடு சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு வருகின்ற முக்கியமான ஆளுமையான எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது மிகவும் மன நிறைவை அளிக்கிறது.  இந்த மன நிறைவின் வழியாக இன்னொரு முப்பது ஆண்டுகள் அவர் அயர்வின்றி உழைப்பார்.  அத்தகு ஊக்கத்தை பெறுவதற்கான ஒரு முக்கியமான தருணமாக இந்த நாள் அமையும் என்று நான் நம்புகிறேன்.