Home

Sunday, 7 December 2025

மகிழ்ச்சி வெள்ளம்

 

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவரும் இலக்கியத்தின் மீது வற்றாத ஆர்வம் கொண்டவருமான நடராசன் அவர்களே. பாவை விருதுகள் விழாவை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களே. என்றென்றும் ஆன்றோர் விருது பெற்றிருக்கும் முனைவர் மு.ராஜேந்திரன் அவர்களே. மூத்த படைப்பாளி சிறப்பு விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் கலாப்ரியா அவர்களே. சக விருதாளர்களாக இம்மேடையில் வீற்றிருக்கும் அபிஷன் ஜீவிந்த், கவிஞர் வெய்யில், சு.தமிழ்ச்செல்வி, தமிழ்மகன், ஆதி வள்ளியப்பன், ரம்யா வாசுதேவன், கடற்கரய் ஆகிய தோழைமை உள்ளங்களே. பேராசிரியப் பெருமக்களே. அவையில் நிறைந்திருக்கும் அன்பு உள்ளங்களே, மாணவச் செல்வங்களே. இந்த நிகழ்ச்சிக்காக வந்திருக்கும் வாசகர்களே. உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பி.எஸ்.குமாரசாமி ராஜா: கறை படியாத கரங்கள்

 

முதலாம் உலகப்போரில் இந்தியரை ஈடுபடுத்தும்போது அளித்த வாக்குறுதிகளையெல்லாம் போர் முடிந்ததும் பிரிட்டன் அரசு புறக்கணிக்கத் தொடங்கியது. அதுமட்டுமன்றி, இந்தியாவில் சுதந்திரத்துக்கான குரல் ஓங்கி ஒலிக்கக்கூடும் என எதிர்பார்த்து, முன்னெச்சரிக்கையாகத் தன்னை ஆயத்தம் செய்துகொள்வதற்கு இசைவாக, இந்தியாவில் நிலவும் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளைப்பற்றி ஆய்ந்து அறிக்கையளிக்கும் வகையில் ரெளலட் என்பவருடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் இந்தியாவெங்கும் பயணம் செய்து தன் அறிக்கையை அளித்தது. அதன் பரிந்துரையை ஏற்ற அரசு, உடனடியாக அதையே சட்டமாக்கி நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

அற்புத மனிதர், அற்புத வாழ்க்கை

 

ஒருமுறை  விட்டல்ராவ் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது என் மனைவி காய்கறிகள் வாங்கி வருவதற்காகக் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தார். அவரை வரவேற்று கூடத்தில் அமரவைத்தேன். சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். பிறகு மேசையில் இருந்த புதிய பத்திரிகைகளை அவரிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு “கொஞ்ச நேரம் புரட்டிகிட்டே இருங்க சார். டீ போட்டு எடுத்துட்டு வரேன்”  என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குச் சென்றேன். ஐந்து நிமிடங்களில் அவருக்கும் எனக்குமாகச் சேர்த்து தேநீர் தயாரித்து இரு கோப்பைகளில் நிரப்பி எடுத்துக்கொண்டு மீண்டும் கூடத்துக்குத் திரும்பினேன்.