ஒருநாள் ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரும் அவருடைய எட்டு வயது மகனும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அவருடைய மகன் தரைவிரிப்பில் உட்கார்ந்துகொண்டு கோலிக்குண்டுகளை வளைத்துவளைத்து அடுக்குவதில் ஈடுபட்டிருந்தான். அடுக்கும் வேலை முடிந்ததும் “அப்பா, இங்க பாருங்க, பாம்பு” அச்சுறுத்தும் குரலில் சொன்னான்.