நான் பிறந்த ஊர் வளவனூர். என்னுடைய அப்பாவின் பெயர் பலராமன். கடைத்தெருவில் வாடகைக்கட்டடத்தில் தையல்கடை வைத்திருந்தார். என் அம்மாவின் பெயர் சகுந்தலா. புதுச்சேரியில் பிறந்தவர். அப்பாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு வளவனூருக்கு வந்தவர்.