Home

Monday, 29 September 2025

கற்றுக்கொள்வதற்கு எல்லையே இல்லை

 

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறுதித்தேர்வு விடுமுறைக்காகக் காத்திருப்பேன். அந்த விடுமுறையில்தான் தாத்தா வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். போகும்போது அம்மாவோ அப்பாவோ யாராவது ஒருவர் எனக்குத் துணையாக  வந்து தாத்தா வீட்டில் விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். ஒரு வாரமோ, பத்து நாட்களோ கழிந்ததும் தாத்தா என்னைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைப்பார். நானாகவே ஊருக்கு வந்து சேர்ந்துவிடுவேன். 

பொறியற்ற விலங்குகள்

 

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நடைபெற்றுவந்த காலத்தில் நிர்வாக வசதிக்காக தமிழகம் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றில் தெலுங்குப் பாளையங்கள் ஐம்பத்தாறு. தமிழ்ப்பாளையங்கள் பதினாறு. பதினாறு தமிழ்ப்பாளையங்களுக்கும் தலைமையிடமாக நெற்கட்டான் செவ்வயல் பாளையம் திகழ்ந்தது. 

கன்னடத்தில் எழுதிய இந்திய நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவுக்கு அஞ்சலி

  

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் ‘ஆதான் பிரதான்’ என்னும் திட்டத்தின் கீழ் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் தலைசிறந்ததாக விளங்கிய செவ்வியல் நாவல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து நூல்களாக வெளியிட்டது. அவ்வகையில் பத்துக்கும் மேற்பட்ட பிறமொழி நாவல்கள் தமிழில் வெளிவந்தன. 1987இல் எச்.வி.சுப்பிரமணியன் என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ என்னும் நாவலும் அவற்றில் ஒன்று. அதன் மூல ஆசிரியர் கன்னட மொழியின் தலைசிறந்த எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பா. தமிழ்ச்சூழலில் அவருடைய அறிமுகம் அப்போதுதான் தொடங்கியது.

வாசலைவிட்டு அகன்றுசென்ற யானை : ரமேஷ் பிரேதனுக்கு அஞ்சலி


1995ஆம் ஆண்டில் புதுச்சேரியில் நடைபெற்ற ஓர் இலக்கியக்கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது, கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த வளாகத்தில் ஒருவர் மேசையின் மீது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் அடுக்கிவைத்து விற்பனை செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். வழக்கத்தில் இல்லாத ஒரு வடிவத்தில் ஒரு புத்தக அடுக்கு அங்கு இருந்தது. அதன் தோற்றத்தாலேயே ஈர்க்கப்பட்டு நான் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதன் பெயர் ’புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’ பிரேமும் ரமேஷும் சேர்ந்து எழுதிய புத்தகம். அந்தப் பெயர் அப்படித்தான் எனக்கு முதன்முதலாக அறிமுகமானது.

Sunday, 21 September 2025

அதிசய மனிதரும் அற்புத ஓவியங்களும்

 

சந்தியா பதிப்பகம் நடராஜனின் மகனுடைய திருமண நிகச்சியில் கலந்துகொள்வதற்காக பெங்களூரிலிருந்து  விட்டல்ராவ், மகாலிங்கம், அவர் மனைவி, நான், அமுதா, திருஞானசம்பந்தம் என ஆறு பேர் சென்னைக்குச் சென்றிருந்தோம். வழிநெடுக விட்டல்ராவுடன் உரையாடிக்கொண்டே சென்றோம். எந்தப் பேச்சைத் தொடங்கினாலும் அதையொட்டிப் பகிர்ந்துகொள்வதற்கு அவரிடம் சில கதைகளும் பழைய நினைவுகளும் இருந்தன. அந்த உரையாடல்களை மட்டுமே தொகுத்தால் ஒரு தனி புத்தகமாக எழுதிவிடலாம். அவற்றைக் காதாரக் கேட்டு சுவைத்தபடி சென்றதால், ஏழுமணி நேரப் பயணம் ஏதோ அரைமணி நேரத்துப் பயணத்தைப்போல  அமைந்துவிட்டது. புறப்பட்டதும் தெரியவில்லை, இறங்கியதும் தெரியவில்லை, சென்னையை அடைந்துவிட்டோம்.

இராசபாளையம் என்னும் தகவல் களஞ்சியம்

 

இராசபாளையம் என்னும் நகரத்தின் பெயரைச் சொன்னதுமே, நான்கு செய்திகள் உடனடியாக ஒரு பொதுவாசகனின் நினைவைத் தொட்டுச் செல்லும். ஒன்று, தமிழ்மாகாணத்தின் முதல்வராக இருந்த குமாரசாமிராஜா. இரண்டு, திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில். மூன்று ஆங்கிலேயர் காலத்திலிருந்து இயங்கிவரும் பென்னிங்டன் நூலகம். நான்கு, வீட்டுக்காவலுக்குப் பேர்போனது என எல்லோராலும் பாராட்டப்படும் கோம்பைவகை நாய்.  இதுவரை மேலோட்டமாக மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருந்த இச்செய்திகளை வரலாற்றுப்பின்னணியில் மிக விரிவாக தன் ‘இராசபாளையம்’ என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார் நரேந்திரகுமார்.

Sunday, 7 September 2025

மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்

 

இலக்கியப் பரிமாற்றம் என்பது தொன்றுதொட்டு வருகிற செயல்பாடாகும். ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு மற்றொரு மொழியில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் அப்படைப்பு அம்மொழியின் சொந்தப் படைப்பைப் போலவே கருதப்படும் அளவுக்குச் சொந்தமாகி விடுவதும் மிக இயல்பாகவே எல்லாக் காலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. காலம் காலமாக வாய்மொழிக் கதையாக மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ராமனின் கதையே, அதன் செல்வாக்கு காரணமாக ஒவ்வொரு மொழியிலும் வரிவடிவம் பெற்றிருக்கிறது. வால்மீகி, துளசிதாசர், கம்பர், எழுத்தச்சன் ஆகியோர் அனைவரும் ஒரே மையக் கதையைக் காவியமாக வடித்தாலும் எழுதப்பட்ட காலம், சூழல், பண்பாடு, கலைக்கோட்பாடு சார்ந்து நுட்பமான வித்தியாசங்களைக் கொண்டவையாகவே மலர்ந்தன.

நான் யாரையும் வெறுக்கவில்லை

 

பட்டப்படிப்பு முடித்த பிறகு போக்கிடமற்ற நானும் என் நண்பர்களும் சத்திரத்துக்குப் பக்கத்தில் உள்ள மகிழ மரத்தடியிலும் ஏரிக்கரையிலும் வேலங்காட்டிலும் திரிவதும் பேசிக்கொண்டிருப்பதுமாகக் காலத்தைக் கழிப்போம். மகிழமரம் என்பது சந்திப்புப் புள்ளி. தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்து சேர்ந்து விட்டால் ஒரு சுற்று முடிந்ததாகக் கணக்கு. ஏன் அப்படி சுற்றினோம், அப்போது என்ன பேசினோம் என்பதெல்லாம் பெரிய கதை.

சிறப்பான சிறுகதைகள்

  

வாழ்க்கையிலும் கதைகளிலும் நிகழும் எதிர்பாராத திருப்பங்களைப்போல, கிருஷ்ணன் சந்தரின் பதினான்கு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு தற்செயலாக உருவாகிவிட்டது. இரண்டு மாதங்கள் முன்புவரையில் கூட இப்படி ஓர் எண்ணம் யாருடைய நெஞ்சிலும் இல்லை. உரையாடலின் போக்கில் எதிர்பாராத விதமாக கருக்கொண்டு வேகவேகமாக ஒரு தொகுதியாக மலர்ந்துவிட்டது.