Home

Sunday, 7 September 2025

மொழிபெயர்ப்புச் சூழலும் சரஸ்வதி ராம்நாத்தும்

 

இலக்கியப் பரிமாற்றம் என்பது தொன்றுதொட்டு வருகிற செயல்பாடாகும். ஒரு மொழியில் எழுதப்பட்ட படைப்பு மற்றொரு மொழியில் மறு ஆக்கம் செய்யப்படுவதும் அப்படைப்பு அம்மொழியின் சொந்தப் படைப்பைப் போலவே கருதப்படும் அளவுக்குச் சொந்தமாகி விடுவதும் மிக இயல்பாகவே எல்லாக் காலங்களிலும் நடந்து வந்திருக்கிறது. காலம் காலமாக வாய்மொழிக் கதையாக மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ராமனின் கதையே, அதன் செல்வாக்கு காரணமாக ஒவ்வொரு மொழியிலும் வரிவடிவம் பெற்றிருக்கிறது. வால்மீகி, துளசிதாசர், கம்பர், எழுத்தச்சன் ஆகியோர் அனைவரும் ஒரே மையக் கதையைக் காவியமாக வடித்தாலும் எழுதப்பட்ட காலம், சூழல், பண்பாடு, கலைக்கோட்பாடு சார்ந்து நுட்பமான வித்தியாசங்களைக் கொண்டவையாகவே மலர்ந்தன.

நான் யாரையும் வெறுக்கவில்லை

 

பட்டப்படிப்பு முடித்த பிறகு போக்கிடமற்ற நானும் என் நண்பர்களும் சத்திரத்துக்குப் பக்கத்தில் உள்ள மகிழ மரத்தடியிலும் ஏரிக்கரையிலும் வேலங்காட்டிலும் திரிவதும் பேசிக்கொண்டிருப்பதுமாகக் காலத்தைக் கழிப்போம். மகிழமரம் என்பது சந்திப்புப் புள்ளி. தொடங்கிய இடத்துக்கே மீண்டும் வந்து சேர்ந்து விட்டால் ஒரு சுற்று முடிந்ததாகக் கணக்கு. ஏன் அப்படி சுற்றினோம், அப்போது என்ன பேசினோம் என்பதெல்லாம் பெரிய கதை.

சிறப்பான சிறுகதைகள்

  

வாழ்க்கையிலும் கதைகளிலும் நிகழும் எதிர்பாராத திருப்பங்களைப்போல, கிருஷ்ணன் சந்தரின் பதினான்கு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பு தற்செயலாக உருவாகிவிட்டது. இரண்டு மாதங்கள் முன்புவரையில் கூட இப்படி ஓர் எண்ணம் யாருடைய நெஞ்சிலும் இல்லை. உரையாடலின் போக்கில் எதிர்பாராத விதமாக கருக்கொண்டு வேகவேகமாக ஒரு தொகுதியாக மலர்ந்துவிட்டது.