நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இறுதித்தேர்வு விடுமுறைக்காகக் காத்திருப்பேன். அந்த விடுமுறையில்தான் தாத்தா வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். போகும்போது அம்மாவோ அப்பாவோ யாராவது ஒருவர் எனக்குத் துணையாக வந்து தாத்தா வீட்டில் விட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். ஒரு வாரமோ, பத்து நாட்களோ கழிந்ததும் தாத்தா என்னைப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவைப்பார். நானாகவே ஊருக்கு வந்து சேர்ந்துவிடுவேன்.
