Home

Sunday, 2 November 2025

வாழ்க்கையின் இலக்கணம்

 

இந்திய இலக்கியத்துக்கு கன்னடமொழியின் மாபெரும் கொடை என வசன இலக்கியத்தைக் குறிப்பிடலாம். வசன இலக்கியத்தின் மூலவர்களான பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி ஆகியோர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆயினும் சிவசிந்தனை அனைவரையும் ஒன்றிணைக்கும் கண்ணியாக விளங்கியது.  கல்யாண தேசம் அவர்கள் அனைவருக்கும் இயங்குதளமாக அமைந்தது.

கற்பனையில் எழும் உலகம்

 

சிறார்களுக்கென பாடல்களை எழுதிவரும் இன்றைய தலைமுறையில் குறிப்பிடத்தக்க கவிஞராக குருங்குளம் முத்து ராஜாவைச் சொல்லலாம். இவருடைய பாடல்கள் பாடநூல்களில் இடம்பெறவில்லை என்றாலும் இணைய உலகில் வலம் வருகின்றன. அதன் வழியாக எப்போதும் சிறார்களுக்கு நெருக்கமானவராகவே அவர் இருந்து வருகிறார்.