Home

Sunday, 31 August 2025

நான் கண்ட குற்றாலம்

 

தொடக்கப்பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தமிழ்ப்பாடத்தில் நான் தணியாத ஆர்வம் கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் எனக்கு ஆசிரியர்களாக இருந்த நவநீதம் டீச்சர், கண்ணன் ஐயா, கிருஷ்ணன் ஐயா ஆகியோர். பாட்டு, கதை, பாடம் எதுவாக இருந்தாலும் அவற்றைச் சொல்லும் விதத்தாலேயே கேட்பவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சொல்லச்சொல்ல பாடல்வரிகளும் கதைக்கூறுகளும் நினைவில் நிரந்தரமாகப் பதிந்துவிடும்.  எல்லா ஆசிரியர்களும் பாடம் படிப்பதை ஒரு விளையாட்டுக்குப் பயிற்சி கொடுப்பதைப்போல மாற்றிவிடும் திறமை கொண்டவர்கள்.

சின்னச்சின்ன கதைச்சித்திரங்கள்

 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் உரையாடி முடித்துவிட்டுப் புறப்படும் சமயத்தில் அந்த அரங்கத்திலிருந்த ஒருவர் தயக்கத்தோடு என்னை நெருங்கிவந்து புத்தகவாசிப்பில் ஒருவருக்கு எப்படி ஆர்வம் பிறக்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டார். நான் அவருக்கு விரிவாகவே பதில் சொன்னேன்.

Sunday, 24 August 2025

புக் பிரம்மா இலக்கியத் திருவிழா 2025 : நிறைவும் நெகிழ்ச்சியும்

 

கன்னட இலக்கியச் செயல்பாடுகளை இணையம் வழியாக உலக அளவில் விரிவாகக் கொண்டுசெல்லும் நோக்கத்தோடு 2021இல் புக் பிரம்மா டிரஸ்ட் உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் நாவலாசிரியரும் ஊடகவியலாளருமான சதீஷ் சப்பரிக்கெ. கடந்த நான்கு ஆண்டுகளாக புக் பிரம்மா ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக பல புத்தக வெளியீடுகளையும் எழுத்தாளர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும்  நடத்திவருகிறது. 

சங்கொலிப்பாதையில் பறக்கும் பறவை

  

1982ஆம் ஆண்டில் நான் கர்நாடகத்தில் பணிபுரியத் தொடங்கினேன். அப்போது எனக்குத் தேவையான புத்தகங்களையெல்லாம் அஞ்சல் வழியாகவும் நண்பர்கள் வழியாகவும் பெற்றுப் படித்துவந்தேன். ஒருமுறை அன்னம் பதிப்பகம் வழியாக வந்து சேர்ந்த புத்தகக்கட்டில் ’தீபாவளிப்பகல்’ என்னும் சின்னஞ்சிறு கவிதைத்தொகுதி இருந்தது. அதன் ஆசிரியர் இரா.மீனாட்சி. எனக்கு அந்தச் சொற்சேர்க்கை மிகவும் பிடித்திருந்தது. 

Sunday, 17 August 2025

முத்து - சிறுகதை

 

’முத்தூ முத்தூ என இரண்டு தரம் கூப்பிட்டுப் பதில் வராமல் போகவே எரிச்சலுடன் முனகியபடியே நாலு எட்டு நடந்து பின்கட்டு இறவாணத்தைப் பிடித்தவாறே சாணம் பிசைந்து கொண்டிருந்த ருக்குவிடம் ‘எங்கடி போயி தொலைஞ்சிது ஒன் சிகாமணி? என்றான் ராமசாமி.

அந்த சொல் ஒலிக்காத நாளே இல்லை

 பாவண்ணன் நேர்காணல்

கேள்விகளும் தொகுப்பும்: கமலாலயன்

 

கமலாலயன்: நீங்கள் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சிறார் பாடல் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள். சிறுகதை, நாவல், நூல் விமர்சனக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என உங்களுடைய பன்முகச் செயல்பாடுகளின் வரிசையில் சிறார்களுக்கான பாடல்களும் கதைகளும் அடங்கும். இத்துறையில் நீங்கள் இவ்வளவு கவனம் செலுத்தி எழுதிவரும் முறை வியப்பளிக்கிறது.  சிறார்களுக்கான பாடல்களை எழுதும் உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? 

Sunday, 10 August 2025

இனிய தாளம், இனிய பாடல்

 

இந்த உலகத்தில் பிறருடைய கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்க்கவும் அந்தச் சிந்தனைகளைச் சித்தரிக்கவும் தெரிந்தவர்கள் எழுத்தாளர்கள்.  கண்ணிமைக்கும் நேரங்களில் எல்லாப் பாத்திரங்களாகவும் உருமாறிச் சிந்தித்துப் பேசும் ஆற்றல் அவர்களுக்குக் கைவந்த கலை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருடைய பேச்சிலும் ஒரு தர்க்கம் இருக்கிறது. அது ஒரு கண்ணாடியைப்  போல. அதன் வழியாக ஆழ்நெஞ்சில் இருப்பவற்றை அவர்களால் அறிந்துகொள்ள முடியும். ஆனால் அத்தகு எழுத்தாளர்களுக்குக் கூட சவாலான ஒரு விஷயம் இருக்கிறது. அது குழந்தைகளைப்போல சிந்திப்பது மற்றும் குழந்தைகளுக்காக எழுதுவது.