Home

Sunday, 4 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 4

 

ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவர்களுடைய இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர் கனகவல்லி. இளையவன் ஆண்குழந்தை. பெயர் கனகராஜா. இருவருமே பெற்றோர்களின் செல்லப்பிள்ளைகள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் வளர்ந்து கல்வி கற்கும் பருவத்தை அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியரொருவர் அரண்மனைக்கே வந்து அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.

கவித்துவம் என்னும் ரசவாதம்

  

ப்ளக் ப்ளக் ப்ளக், காகத்தின் சொற்கள், நாகதிசை ஆகிய கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கவிஞர் ராணிதிலக் குறுங்கதை வடிவத்தில் சில கதைகளை எழுதி ‘ஒரு குட்டி ஆந்தை முதலிய கதைகள்’ என்னும் தலைப்பில் சின்னஞ்சிறியதொரு தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். அவை கதைகள் என தலைப்பிடப்பட்டிருந்த போதும், கவித்துவப்புள்ளியை மையமாகக் கொண்டு சற்றே தளர்வான வடிவத்தில் எழுதி இணைக்கப்பட்ட கவிதைகளாகவே தோற்றமளிக்கின்றன. பெரும்பாலான குறுங்கதைகள், கவிதைக்குரிய கூர்மையான வாசிப்பையும் மறைந்திருக்கும் உள்ளடுக்குகளை அசைபோட்டுப் பிரித்துத் துய்ப்பதற்கான பொழுதையும் கோருபவையாக இருக்கின்றன. குறுங்கதை வடிவத்துக்கு அவை கூடுதல் அழகையே அளிக்கின்றன.

Sunday, 27 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 3

 

ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

 ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து, உரிய காலத்தில் வெயிலும் இருந்ததால், அந்தப் பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாக வளர்ந்திருந்தது. செல்வ வளர்ச்சி இருந்ததால், அரண்மனையில் வசித்துவந்த ராஜாவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

பசி என்னும் தெய்வம்

  

புத்தாண்டு தொடங்கிய சமயத்திலேயே “இன்னும் ஒரு ஏழெட்டு வாரத்துக்கு உங்கள அடிக்கடி பார்க்கமுடியாது. மொபைல்ல பேசிக்கலாம்” என்று சொன்னார் செல்வம். “ஏதாவது வெளியூர்ப்பயணமா?” என்று கேட்டேன். “எந்த வெளியூரும் கிடையாது. எல்லாமே சொந்த ஊரு பயணம்தான். ஆனால் விட்டுவிட்டு ஆறேழு முறை போய் போய் வரணும்” என்று பதில் சொன்னார்.

Sunday, 20 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 2

 

முக்கியமான முடிவு

 

ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவள் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய நேரம் வந்ததும், அனைவரும் இணைந்து பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி அவளுக்குத் திருமணம் செய்துவைத்தனர். மாப்பிள்ளையின் ஊர் தம் கிராமத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நல்ல குணமுள்ளவனாகவும் வசதி உள்ளவனாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.  

வாண்டுமாமாவின் கதையுலகம்

 

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ராணி திலக்கிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் தம் பள்ளியில் கதைப்புத்தகங்களை வாசிப்பதிலும் சொந்தமாக கதைகளை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவமாணவிகளைப்பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து நான் என் பள்ளிக்கூட நாட்களில் நான் விரும்பிப் படித்த வள்ளியப்பா கதைகளைப்பற்றியும் வாண்டுமாமா கதைகளைப்பற்றியும் அவற்றைப் படிக்கத் தூண்டிய என் ஆசிரியர்களைப்பற்றியும் என் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.

Sunday, 13 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 1

 

ஹுச்சையா

 

ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ”ஹுச்சையா ஹுச்சையா” என்றே அழைத்துவந்தனர்.