அரிஜன சேவா சங்க வேலைகளில் ஈடுபட்டிருந்த தொண்டர்களை ஊக்கப்படுத்தவும் அரிஜன மேம்பாட்டுக்கான நிதியைத் திரட்டுவதற்காகவும் 23.01.1934 முதல் தமிழ்நாட்டில் ஒரு நீண்ட பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி என பல இடங்களுக்குச் சென்று பொதுமக்களிடையில் உரையாடிவிட்டு 15.02.1934 அன்று நாகப்பட்டினத்துக்கு வந்து சேர்ந்தார். அன்று காந்தியடிகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சுயமரியாதை இயக்கத்தினர் கருப்புக்கொடி தாங்கி ஊர்வலம் நடத்தினர். ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் மிகப்பெரும் எண்ணிக்கையில் அக்கம்பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் காந்தியடிகளின் உரையைக் கேட்கத் திரண்டு வந்தனர்.